states

img

யமுனை ஆற்றில் விஷம் கலந்த நீரா?

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி யில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால்,”தில்லி மக்கள் பயன்படுத்தும் முக்கிய குடிநீர் ஆதாரமான யமுனை ஆற்றில் ஹரியானா பாஜக அரசு விஷம் கலந்துள்ளது. நல்வாய்ப்பாக ஜல் போர்டு அதிகாரிகள் இதனை முன் கூட்டியே கண்டறிந்ததால், தில்லி மக்கள் உயிர்பிழைத்தனர். இல்லை யெனில் இனப்படுகொலை எனும் அள வுக்கு அதிக அளவிலான மக்கள் கொல் லப்பட்டு இருப்பார்கள்” எனக் கூறினார். கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு தில்லியில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சித்தரிக்கக் கூட முடியாத விஷயம் என பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. கெஜ்ரிவால் மீது தான் தவறு ஹரியானாவிலிருந்து தில்லிக்குள் நுழையும் யமுனை ஆற்றின் தண்ணீரா னது தில்லி மக்களின் முக்கிய நீர் ஆதா ரமாக உள்ளது. யமுனை ஆற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரானது முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, தில்லி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ஹரியானாவில் இருந்து வரும் யமுனை ஆற்றில் அம்மோனியா வின் அளவு திடீரென்று அதிகரித்துள் ளது என ஏற்கெனவே செய்திகள் வெளியா கின. அதாவது தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறுவ தற்கு பதிலாக கெஜ்ரிவால் யமுனை ஆற்றில் விஷம் கலந்ததாகக் கூறினார்.  யமுனை ஆற்றில் அம்மோனியா என்று கூறியிருந்தால் பிரச்சனை ஒன்றும் ஏற் பட்டு இருந்து இருக்காது. ஆனால் விஷம் என்று கூறியதன் காரணமாக தில்லி மக்கள் யமுனை குடிநீரை பயன்படுத்த அஞ்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.