states

நேபாளத்தில் நில நடுக்கம் : 100-க்கும் மேற்பட்டோர் பலி?

திபெத்/காத்மாண்டு, ஜன. 7 - இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வா யன்று காலை நேரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  150-க்கும் அதிகமான மக்கள் படுகாய மடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.  நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்திற்குப் பிறகும் நேபாள - திபெத் எல்லையில் தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டன.   இந்நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நில நடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பலர் சிக்கியுள்ள நிலை யில் அவர்களை மீட்கும் பணியில், மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  இந்தியாவிலும் நில அதிர்வு தில்லி, பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய வட மாநிலங்களிலும் செவ்வாயன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. முதலில், காலை 6:35 மணியளவில் இந்த பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், காலை 7:07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதி வாகியுள்ளன.