states

img

மொபைல் போன் தனியுரிமை மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு

பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காத்தும், செய்தியாளர்களின் மொபைல் போன் தனியுரி மையைப் பாதுகாத்தும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாறு படைத்திடும் தீர்ப்பினை தில்லி பத்திரிகையாளர் சங்கமும், தேசிய பத்திரிகையாளர் கூட்ட ணியும் வரவேற்றுள்ளன. இவை தொடர்பாக தில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) மற்றும் தேசிய பத்திரிகையாளர் கூட்டணி (என்ஏஜே) இணைந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி வருமாறு: மொபைல் தனியுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காக்கும் விதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தில்லி பத்தி ரிகையாளர் சங்கமும், தேசிய பத்திரிகையாளர் கூட்டணியும் முழு மனதுடன் வரவேற்கின்றன. பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து செய்தி வெளி யிட்டபோது, பத்திரிகையாளர்க ளின் மொபைல் போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இதனை பிப்ரவரி 6 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது நீதிமன்றம் கண்டித்துள்ளது. பத்தி ரிகையாளர்களிடம் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தனிநபர் தரவுக ளைத் தருமாறு கட்டாயப்படுத்து வதும் அவற்றை வெளியிடுமாறு கேட்பதும் பத்திரிகை சுதந்தி ரத்தின் மீதான தாக்குதலேயன்றி வேறல்ல என்றும் இவை அவர்க ளிடம் அவர்களைக் கண்காணித்து க்கொண்டிருக்கிறோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒடுக்கும் செயலேயாகும் என்றும் நீதியரசர் ஜி.கே. இளந்திரையன் கூறியிருக்கிறார். 

பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு

தங்களின் தொலைபேசிகள் பறி முதல் செய்யப்பட்டதற்கு எதிராக வும், தங்களிடம் தனிப்பட்ட கேள்வி கள் கேட்கப்பட்டதை எதிர்த்தும் துணிச்சலுடன் வழக்குகள் தொடுத்த நான்கு பத்திரிகையா ளர்களையும் தில்லி பத்திரிகையா ளர்கள் சங்கமும், தேசிய பத்திரி கையாளர்கள் கூட்டணியும் பாராட்டுகின்றன. அண்ணா பல்கலைக் கழ கத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை க்கு உள்ளாக்கப்பட்டதை விசா ரித்துவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு பத்திரிகையாளர்களிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக் குப் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள், வெளிநாட்டுப் பய ணங்கள் போன்றவை தொடர்பான வைகளாகும். அவற்றின் ரகசிய ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரப்பட்டுள்ள னர். இந்த விசாரணையை ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைத் திருப்பித்தர வேண்டும் என்றும், இத்தகைய  துன்புறுத்தல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன் றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

தில்லி காவல்துறைக்கு கோரிக்கை

இத்தகு பின்னணியில் இதே போன்றே தில்லி காவல்துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ்கிளிக் ஊழியர்கள் மீதான சோதனைகளின்போது கைப் பற்றப்பட்ட பத்திரிகையாளர்களின் மொபைல் போன்களையும், மடிக் கணினிகளையும் காவல்துறையி னர் திருப்பித்தர வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர்கள் சங்க மும், தேசிய பத்திரிகையாளர்கள் கூட்டணியும் கோருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.                    (ந.நி.)