கொல்கத்தா, பிப்.22- இந்தியாவிற்கான கியூபா தூதரகத்தின் புதிய தூதரக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள மலேனா ரோஜாஸ் மதீனா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மலேனா ரோஜாஸ் மதீனா புதுதில்லியில் உள்ள கியூபத் தூதரகத்தின் பத்திரிகை மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கிறார். மாதர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரை யாடிய மதீனா, கியூபப் புரட்சியில் பெண் களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார். இந்தியாவில் உள்ள முற்போக்கு ஆர்வலர் களுக்கும் கியூபாவிற்குமான நீண்டகால ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் ஒரு நட்பு ரீதியான சந்திப்பு இது என்றார். கியூபப் பெண்களின் குழந்தை பரா மரிப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புகள், 24 மணிநேர மருத்துவ சேவை வழங்குவது குறித்தும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளுக்கு கியூப அரசு எப்படி தீர்வு காண்கிறது என்பது குறித்தும் விளக்கிய மதீனா, தொற்றுநோய்களின் போது கியூபப் பெண்களின் முன்மாதிரியான பங்களிப்பையும் எடுத்துரைத்தார். இந்தியாவிற்கும் கியூபாவிற்கும் இடையே பாலின சமத்துவம், பெண்கள் தொடர் பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதில் பரஸ்பரம் நல்ல உடன்பாடு உள்ளது எனக் கூறிய மதீனா, எதிர்வரும் காலங்களில், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை களின் செயல்பாட்டில் கியூபாவிற்கும் அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த முன்முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். இந்தியாவில் பாலின வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக மாதர் சங்கம் நடத்திய போராட்டங்களை நிர்வாகிகள் தூதரிடம் பகிர்ந்து கொண்டனர்.