எதுவொன்றிலும் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்கா மலேயே சட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு, மக்களவை யிலும், அனைத்து மாநில சட்டப்பேரவை களிலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு நாடாளு மன்றத்தில் மசோதா கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது. ஒன்றிய அரசின் சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.