மைசூரு, அக்.6- கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 700 கி.மீ. தூரத்திற்கு இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி மேற் கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்த பயணத்தைத் துவக்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா வழியாக செப்டம்பர் 30-ஆம் தேதி கர்நாடகம் சென்றார். இங்கு தசராவையொட்டி அக்டோபர் 4, 5 ஆகிய இரண்டு நாட் கள் நடைப்பயணத்தை ஒத்திவைத்து, மைசூருவில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், அவரை காண்ப தற்காகவும், இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி அக்டோபர் 3-ஆம் தேதி மைசூருக்கு வருகை தந் தார். தசராவை முன்னிட்டு மைசூரு மாவட்டம், எச்.டி. கோட்டே வட்டம், பேகூர் கிராமத்தில் உள்ள பீமன கொல்லி கோயிலில் புதன்கிழமை யன்று சோனியா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இதனிடையே, இரண்டு நாள் ஓய்வுக்குப் பின், மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகிலிருந்து, வியாழ னன்று காலை ராகுல் காந்தி தனது நடை பயணத்தைத் துவங்கினார்.
அப்போது, ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் நடைபயணத்தில் கலந்து கொண்டார். சில கிலோ மீட்டர் தூரம், சோனியா காந்தி நடந்து வந்த நிலையில், ‘தொடர்ந்து நடக்க வேண் டாம் காரில் வாருங்கள்’ என தன் தாயாரை ராகுல் காந்தி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சோனியா காந்தி நடைப்பயணத்திலி ருந்து விடைப் பெற்றுக் கொண்டார். உடல்நிலை சரியில்லாத காரணத் தால், சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரக் கூட் டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சி களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் இந்திய ஒற்று மைப் பயணத்தில் கலந்து கொண்டது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி கர்நாடகத்தில் மட்டும் 22 நாட்கள் நடைப்பயணம் செல்லும் நிலையில், விரைவில் பிரி யங்கா காந்தியும் ராகுலின் பிரச்சா ரத்தில் இணைவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.