மேற்கு வங்க மாநிலம் துப்குரி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஈஸ்வர் சந்திர ராய் களமிறங்குகிறார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சி வேட்பாளர் போல அல்லாமல் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.