states

img

அதானியின் 736 மில்லியன் டாலர் எரிசக்தித் திட்டத்திற்குத் தடை: கென்ய நாட்டு உயர்நீதிமன்றம் அதிரடி

நைரோபி, அக்.26- கென்யா அரசு நிறு வனம் ஒன்றுடனான அதானி நிறுவனத்தின் 736 மில்லியன் டாலர் ஒப் பந்தத்தை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்தது. கென்யா அரசுக்குச் சொந்தமான  கென்யா எலக்ட்ரிக்கல் ட்ரான்ஸ்மிஷன்  (KETRACO) மற்றும் அதானி எனர்ஜி  சொல்யூஷன்ஸ் இடையே அக்டோபர் 11 அன்று, பொது-தனியார் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொடர்ச்சியான மின்  வெட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது டன், பொருளாதார வளர்ச்சிக்கும் உத வும் என்று கென்யாவின் எரிசக்தி அமைச்சகம் அப்போது கூறியிருந்தது. ஆனால், கென்யா எலக்ட்ரிக்கல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எனர்ஜி  சொல்யூஷன்ஸ் ஆகியவை 2021-ஆம்  ஆண்டின் பொது - தனியார் கூட்டா ண்மை சட்டத்தின் கீழ் அடிப்படையில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வில்லை. எரிசக்தி அமைச்சகம் இது போன்ற ஒப்பந்தங்களுக்கு ஏல முறை யை பின்பற்றி வந்த நிலையில், தற்போது,  அவ்வாறு போட்டியை அனுமதிக்க வில்லை. மிகவும் ரகசியமாக மேற் கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, இந்த  மின்சார ஒப்பந்தம், ஓர் ‘அரசியலமைப்பு மோசடி’ என்று சட்ட சங்கம் அமைப்பு கென்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தான், தீர்ப்பு வரும்  வரை, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸு டனான 30 ஆண்டு ஒப்பந்தத்தை அரசு  முன்னெடுக்க முடியாது என்று ஒப்பந் தத்தையே நிறுத்தி வைத்து கென்ய உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று (அக்.25) உத்தரவிட்டுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச  விமான நிலையம்அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதற்கும்  கடந்த செப்டம்பரில் இடைக்காலத் தடை விதிக்  கப்பட்டது.