states

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்குக!

தமிழ்நாட்டில், 23 வெகுமக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கையை துவங்கியுள்ளன. அதன் துவக்கமாக ஆகஸ்ட் 1 அன்று சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் தீர்மானங்கள் வருமாறு:

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட நிலமற்ற விவ சாயத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நவீன இயந்திரமயமாக்கல் மற்றும் அரசுகளின் கொள்கை களால் உருவாகியுள்ள மாற்றங்களால் வேலை- வருமான இழப்பை சந்திக்கின்றனர். கிராமப்புற வேலை யின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் குறிப்பாக இளைய பிரிவினரின் ஒரு பகுதியினருக்கு, அண்டை நகரங்களில் சிறிது வேலைவாய்ப்புக் கிடைத்து வந்தது. ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றை அணுகிய விதம் உள்ளிட்டக் காரணங்களில் நகரங்களிலும் சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை யின்மையின் ஒட்டுமொத்த நெருக்கடிக்கும் கிராமப்புற மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிதைக்கப்படும் கிராமப்புற வேலை உறுதித்திட்டம்

கிராமப்புற உழைப்பாளிகளுக்கு, ஓரளவிற்கு பயனளித்து வந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை யும் ஒன்றிய அரசு முற்றிலுமாக சிதைத்து, நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி வருகிறது. நடப்பு 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஒன்றிய அரசு ரூ.89 ஆயிரம் கோடியிலி ருந்து ரூ.60 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டது. மேலும் நாடாளுமன்ற திருத்தங்கள் மூலமாக நிறை வேற்றிட வேண்டிய சட்ட விதிகளையெல்லாம் தானடித்த மூப்பாக திருத்தி, சட்டத்திற்குப் புறம்பாக ஒப்பந்ததாரர்க ளையும், எந்திரங்களையும் பயன்படுத்த அனுமதிய ளித்துள்ளதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் கூலியாக விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியது, கட்டுமானப் பணியின் வாயிலாக ஒப்பந்த தாரர்களுக்கு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்திட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள  சட்டக்கூலியையும், வேலை நாட்களையும் முழுமை யாக வழங்கிட வேண்டும்.

நகர்ப்புற ஏழ்மை

அதேபோல், நகர்ப்புற வேலையின்மை நகர்ப்புற மக்களை பெரிதும் திண்டாட்டத்தில் தள்ளியுள்ளது. முழு வதும் கிராமப்புற தன்மை கொண்ட – விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்துள்ள பேரூராட்சிப் பகுதிகள் நகர்ப்புற சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள தால், பேரூராட்சிப் பகுதி மக்கள் கிராமப்புற மக்களாக  விவசாயக் கூலிகளாக இருந்தும் ஊரக வேலைத்திட்டம் செயல்படுத்த இயலாமல் போய்விடுகிறது. 2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு பொருளாதார நிலைமைகள் குறித்து ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசால் அமைக் கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு, ஊரக வேலைத்திட்டம் போல நகர்ப்புற வேலைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு துவங்கிட வேண்டுமென்ற பரிந்துரையை வழங்கியது. நகர்ப்புற ஏழைகளின் இந்த வாழ்வாதாரக் கோரிக்கையை அன்றைய அதிமுக அரசு காற்றில் பறக்கவிட்டது. 

ஏமாற்றத்தில் பயனாளிகள்

2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு “நகர்ப்புற வேலை ஊதியத் திட்டத்தை” 37 பேரூராட்சி கள், 7 நகராட்சிகள், 14 மாநகராட்சி வார்டுகளில் செயல் படுத்தியதுடன், மற்ற நகர்ப்புற பகுதிக்கும் படிப்படி யாக விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை செய்தது.  எனினும், ஓராண்டிற்கு மட்டும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் திட்டத்தின் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, பேரூராட்சி மக்களின் வேலையின்மையை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி திட்டத்தை விரிவாக்கம் செய்து செயல்படுத்திட வேண்டுமெனவும், ஒன்றிய பாஜக அரசு, நகர்ப்புற வேலை உறுதி சட்டம் இயற்ற வேண்டுமெனவும், சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் கோரு கிறது.

நிலமற்ற ஏழைகளுக்கு  நிலம் வழங்குக!

வாழ்க்கை நெருக்கடிகளின் உச்சத்திற்குத் தள்ளப் பட்டுள்ள விவசாயத் கூலித் தொழிலாளர்களுக்கு முந்தைய கலைஞர் ஆட்சிக்காலத்தில் செயல் படுத்தப்பட்டதைப் போல, வேளாண் தொழிலா ளர்களின் நலன்களைப் பாதுகாத்திட விவசாயத் தொழி லாளர்களுக்கான நலவாரியச் சட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்திட வேண்டும். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இரு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலமற்ற பகுதியின ருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தை கறாராக செயல்படுத்தி, தமிழகத்தில் உள்ள அரசு உபரி நிலம் மற்றும் தரிசு நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்தளிக்க உறுதியான நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டுமென சமூக பாது காப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்  கோருகிறது.