நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் வெப்பநிலை மற் றும் காற்றின் வேகம் குறைந்த தால் ஞாயிறன்று காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் 306 ஆக அதிக ரித்தது என காற்று தரக் குறியீடு அறிக்கை யில் வெளியாகியது. தில்லியில் மட்டு மல்லாது உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா (308), ஹரியானா மாநிலம் குர்ஹான் (283) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாகியது. இதனால் தில்லி அரசு வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தயாரான நிலையில், செவ்வா யன்று காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டது என காற்றின் தரக் குறியீடு மூலம் தகவல் வெளியாகியது. செவ்வாயன்று மதியம் 12 மணி அளவில் தில்லி பகுதியின் காற் றின் தரம் 220 ஆக குறைந்தது. தில்லியைப் போல நொய்டா, குர்ஹான் ஆகிய பகுதி களிலும் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.