states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக இருந்த பொழுது சூரிய சக்தி ஒப்பந்தத்திற்காக அதானியிடம் ரூ.1,750 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெகன் மோகன் மாநிலத்தின் மீது ரூ.17,000 கோடி அளவில் மின்கட்டண சுமையை ஏற்றியுள்ளார். இந்தியாவை அதானி களங்கப்படுத்துகிறார் என்றால், ஆந்திராவை ஜெகன் மோகன் களங்கப்படுத்துகிறார்.

அதானி மீதான அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு விசாரணை நடைமுறை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடியின் பெயர் கண்டிப்பாக சேர்க்கப்படும். மோடி, அமித்ஷா இருவரும் இந்தியாவுக்கு அதானி ஊழல் மூலம் பெரும் அவப்பெயரை கொண்டு வந்துள்ளனர்.

அதானி விவகாரம் இந்தியாவின் பிம்பத்தை பாதிக்கிறது. அதானி விவகாரத்தை மோடி அரசின் ஏஜென்சிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மூடிமறைக்க முயன்றாலும், அது அம்பலமாகும். இது இந்தியாவின் கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அதானி பயணம் செய்யும் போதெல்லாம் இலங்கை முதல் இஸ்ரேல் வரை பல வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா அரசு மருத்துவமனையின் கழிவறையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை  தெருநாய் கவ்விச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 6 மாத கர்ப்பிணியாக இருந்தவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவ உதவிக்கு யாரும் இல்லாததால் கழிவறையில் குழந்தை பெற்றதாக கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் மலையாள நடிகர் அப்துல் நாசர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களையும் ரத்து செய்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியில் காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட  நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்பட வில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித் துள்ளது.

கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படு வதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

“ஒன்றிய தொகுப்பிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதற்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகள், அதானி குழுமத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறுவது பொய்யானது, ஆதாரமற்றது” என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள உரத் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிந்தனர். 9 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.