அண்மையில் நடை பெற்ற சண்டிகர் மாநக ராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி 14, பாஜக 12, காங்கிரஸ் 8 இடங் களைக் கைப்பற்றி யிருந்த நிலையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சரப்ஜித் கவுர் வெற்றி பெற்று ள்ளார். காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் பாஜக-வில் இணைந்ததாலும், ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒருவரின் வாக்கு செல்லா தது என அறிவிக்கப்பட்டதாலும் பாஜக மேயர் பதவியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக எம்.பி.யின் வாக்கும் சரப்ஜித் கவுர் வெற்றிக்கு சாதகமாகியுள்ளது.