தில்லி பால் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பசுக்கள் பலியாகியுள்ளன.
தில்லியில் உள்ள ரோகிணி சவ்தா என்ற கிராமத்தில் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் இன்று நண்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் 20 பசுக்கள் தீயில் கருகி உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தில்லியில் உள்ள இந்த பால் பண்ணையில் இருந்து உள்ளூர் சந்தையில் பசுவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு தேவை இருந்தது. இதனால் அனைத்து பால் பண்ணைகளும் நிதி இழப்பை சந்தித்துள்ளன.
கடந்த மாதம், டெல்லி அருகே உள்ள காசியாபாத் இந்திரபுரம் கிராமத்தில் உள்ள பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 39 பசுக்கள் உயிாிழந்தது குறிப்பிடத்தக்கது.