states

தீக்கதிர் விரைவு செய்திகள்

“காந்தாரா - 2” திரைப்படத்திற்காக வனப்பகுதி அழிப்பு ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் “காந்தாரா: சாப்டர் 1” என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவின் கவுகுடா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தியதாகவும், வனப்பகுதிக்கு தீ வைத்து சுற்றுச்சூழ லை மாசுபடுத்தியதாகவும்  கவுகுடா வனப் பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். மேலும் வனப்பகுதியில் தீ வைப்ப தன் காரணமாக அங்குள்ள விலங்கு கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரு வதாகவும், படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, போராட்ட எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மோதல் இதனிடையே படக்குழுவுக்கும், கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் கவுகுடா கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். இதையடுத்து படக்குழு மீது எசலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படை யில் படப்பிடிப்பின்போது வெடிப்பொருட் கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவ தாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தில்லி சட்டமன்ற தேர்தல் 699 வேட்பாளர்கள் போட்டி

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் தில்லி சட்டமன்ற தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ள தாக மாநில தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டதே அதிக பட்ச எண்ணிக்கையாக இருந்தது. கெஜ்ரிவால் தொகுதியில் அதிகம் தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி யின் கூற்றுப்படி, தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணை ப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ள னர். புதுதில்லியைத் தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர் கார்வால் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் உள்ளனர். அதே போல படேல் நகர், கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா 5 பேர் வீதம் குறைந்த எண்ணிக்கை யிலான வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு:  பிப். 5-இல் பொது விடுமுறை!

சென்னை, ஜன. 21 - ஈரோடு கிழக்கு சட்டப்பே ரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடரந்து, வேட்புமனுத் தாக்கல் நடந்து முடிந்து, மொத்தம் 47 பேர் வேட்பா ளர்களாக களத்தில் உள்ள னர். பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகு திக்கு உட்பட்ட பள்ளிகள்,  கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங் களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட பகுதியில் வாக் காளராக இருப்பவர்கள் மாநி லத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர் களுக்கும் இந்த விடு முறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களின் கல்வி மீதான யுத்தமே யுஜிசி-யின் புதிய விதிகள்!

சென்னை, ஜன. 21 - “ஒன்றிய பாஜக அரசின் யுஜிசி விதி களை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய பட்டங் கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைக்கழ கங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார். மேலும், “இந்த செயல் தமிழ கத்தின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் சர்வாதிகாரம் மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமை யும் கிடையாது’ எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டி பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது. ஒன்றிய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப் பட்டு படித்து வாங்கிய பட்டங்கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங் கேற்க முடியாது. பல்கலைக்கழ கங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர். அஞ்சமாட்டோம் மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன்  விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திடா விட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள். இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திமுக அரசு அஞ்சாது. பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும். இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார்.

136 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் தீவிரம்

தமிழக பாடநூல் கழகம் தகவல்

சென்னை, ஜன.21- தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பு மானியத் திட்டத்தின் கீழ் 136 தமிழ்  நூல்கள் பிற மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலன் கருதியும், தமிழ் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நூல்கள் வெளி யிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றுள் ளன. அந்த வகையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு புத்தகக் காட்சி-2025 நிறைவு விழாவில் தமிழக பாடநூல்  கழகம் தயாரித்த 75 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டார். திசைதோறும் திராவிடம் திட்டத்தில் 15 நூல்கள், முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டத்தில் 32, நாளைய தலைமுறைக்கு நாட்டுடமை நூல்கள் பிரிவு மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தில் தலா 3, நூற்றாண்டு காணும் ஆளுமைகள் பிரிவில் 2, சிறார் களுக்கு உலக இலக்கியங்கள் பிரிவில்  8, செவ்வியல் இலக்கியங்கள் எளிய உரைகள், அரிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் தொகுதியில் தலா 1, உலக மொழிகளில் பெரியார் சிந்தனை கள் மொழிகள் 10 என மொத்தம் 75 புத்த கங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல், தமிழக அரசின் மானி யத்தின் வாயிலாக முதல்கட்டமாக மொழிப் பெயர்க்கப்பட்ட 30 நூல்களும் வெளியிடப்பட்டன. அதன்படி பத்துப் பாட்டு நூல்கள், ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி மலாய் மொழியிலும், பாரதிதாசனின் கவிதைகள், எஸ்.ராம கிருஷ்ணனின் இரண்டு குமிழிகள் அரபி மொழியிலும், பெரியார் தன் காலத்தை தாண்டி சிந்தித்த முன்னோடி, ஜெய காந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம், பூமணியின் பிறகு, ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் ஆகி யவை கொரிய மொழியிலும் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பெருமாள் முருகனின் பூனாச்சி ஆர்மீனிய மொழியிலும், ‘இந்து தமிழ்திசை’ நாளிதழுடன் இணைந்து வெளியிட்ட மாபெரும் தமிழ்  கனவு குஜராத்தி, பெங்காலி மற்றும் இந்தியிலும், யதுகிரி அம்மாள் எழுதிய  பாரதி நினைவுகள், கவிஞர் வைரமுத் துவின் கருவாச்சி காவியம், சு.தமிழ்ச் செல்வியின் அளம் மலையாளத்திலும், மலாய் மொழியில் 3 நூல்களும், சுவா ஹிலி, கன்னடம், மராத்தி மொழிகளில் தலா 1 நூலும் வெளியிடப்பட்டது என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக் கிறார்.