அமைச்சரின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதில்
புதுதில்லி, டிச.23- மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு நீதி, தமிழ கத்திற்கு ஒரு நீதி என்று செயல்படுகிறது என சு.வெங்கடேசன் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை நானும், மாணிக்கம் தாகூர் எம்.பி., யும் சந்தித்த போது அவர் வெளிப்படுத்திய கருத்துகளை நாங்கள் வெளியிட்டது ஆழமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் மீண்டும் தனது கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிலில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலைய மாக்க அமைச்சர் மறுத்தார் என நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்கிறார். மிகுந்த அதிர்ச்சியாய் இருக்கிறது என்கிறார். ஏன் இவ்வளவு அதிர்ச்சி ? எது உண்மையற்றது? அவர் தனது பதிலில் முதலில் வட இந்தியா விலும், தென்னிந்தியாவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் மாநி லங்கள் உண்டு என்கிறார். இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமெனில் அதன் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வேண்டுமென்கிறார். அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்கிறார்
இவற்றையெல்லாம் தாண்டி, மதுரையில் இருந்து ஏற்கெனவே சில சர்வதேச விமானங்கள் செல்கிறது. அப்படியிருக்க ‘சர்வதேச விமான நிலையம்’ என்று அழைப்பதுதான் பிரச்சனையா? எனக் கேட்கிறார். கூடுதலாக சர்வதேச விமா னங்களை மதுரையில் இருந்து இயக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் எனச் சொல்கிறார். இவ்வளவு சொல்லும் அமைச்சர் “மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம்” என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். அது தான் பிரச்சனையின் மையப்புள்ளியே. நேரடி சந்திப்பின் போது “பல வடமாநிலங் களில் ஒரு சர்வதேச விமானநிலையம் தான் இருக்கிறது. ஏற்கெனவே 5 மாநில முதல்வர்கள் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் ஏதும் செய்யவில்லை. இதில் ஏற்கெனவே தமிழகத்தில் 3 சர்வதேச விமான நிலையங்கள் இருக்க, நான்காவதாக மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறி விக்க வாய்ப்பே இல்லை” என்று தான் மிக அழுத்தமாக வாதிட்டார். அதைத் தான் வேறுவகையில் தற்போதும் கூறியுள்ளார். மதுரையில் இருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படு கின்றன; அப்படியிருக்க அதனை சர்வதேச விமான நிலையம் என அறிவித்தால் தான் செல்லுமா? என்று கேட்கிறார். பிறகு என்ன பிரச்சனை, அறிவிக்க வேண்டியதுதானே? என்றால் அதற்கு பதில் இல்லை.
அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு மதுரையில் இருந்து விமானங்களை இயக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறிய செய்தியை உடனடியாக வெளி யிட்டோம். அதை நாங்கள் மறுக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. வரவேற்றோம். ஆனால் அமைச்சர் சிந்தியா தானே பேசிய சில விசயங் களை மறுக்கிறார்.
மதுரைக்கு தகுதி இல்லையா?
சர்வதேச விமான நிலையம் எனில் அதற்கென அளவீடுகள், ஒப்பந்தங்கள், அடிப்படைக் கட்ட மைப்புகள், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்புடையது என்கிறார் அமைச்சர் சிந்தியா. இதில் தான் பிரச்சனை இருக்கிறது. கட்டமைப்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை தான் பிரச்சனை எனில் நாடாளுமன்றத் தில் நான் பேசியதை மீண்டும் கேளுங்கள்.
கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் வார ணாசி மற்றும் குஷிநகர் சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை விட ஏறக்குறைய மூன்றுமடங்கு அதிகம் மதுரை விமானநிலை யத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டு பயணி களின் எண்ணிக்கை. அதுமட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள 21 சர்வதேச (A) விமான நிலைய ங்களில் 11 ல் இருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரை விமானநிலையத்திலிருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும், ஒன்றிய விமானத்துறை அறிவித்துள்ள 10 கஸ்டம்ஸ் விமான நிலையங்களில் பன்னாட்டுப் பயணிகள் அதிகம் பயணிக்கும் விமானநிலைய மாக தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது மதுரை விமான நிலையமே.
அதனால் தான் தொடர்ந்து பல ஆண்டு களாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 2021 அக்டோ பரில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு கிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் துவக்கப்படும் என அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். எந்த அளவீடு, கட்டமைப்பு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் மூன்று சர்வதேச விமானநிலையங்கள் உ. பி. யில் துவக்கப்படு கின்றன? எந்த புள்ளிவிபரத்தின் படி எங்களுக்கு மறுக்கப்படுகின்றன?
இந்தியாவின் எந்த வளர்ச்சி சார்ந்த மனிதவளக் குறியீடுகளிலும் முன்னணியில் இல்லாத மாநிலத்துக்கு இவ்வளவு முக்கியத் துவத்தை கொடுக்கும் நீங்கள், வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் பலவற்றில் முதன்மையாக இருக்கும் மாநிலம், ஜிஎஸ்டி பங்களிப்பில் நாட்டி லேயே இரண்டாவதாக இருக்கும் மாநிலமான தமி ழகத்துக்கு ஏன் நியாயம் வழங்க மறுக்கிறீர்கள்? “அரசு இன்னும் எத்தனை விமான நிலை யங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது” என்றும் கூறும் அமைச்சர் அவர்களே! அதே வேகத்தோடு மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும். நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிக மாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.