states

பாகிஸ்தானில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 59 பேர் பலி

இஸ்லாமாபாத்,ஜூலை 10- பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் பலியாகினர்.  பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சராசரி அளவை விட இந்த ஆண்டு பருவமழை இதுவரை 86 சதவீத அளவுக்கு பெய்துள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. பலுசிஸ்தான், கைபர் கப்துவா மாகாணங்களில் தொடர் கனமழை பெய்தது.இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ,  5 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனித் தீவுகளாக மாறின. ஏராளமான வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.  கராச்சி நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. விமான நிலையத்தின் ஓடுபாதை யில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விமானப் போக்குவரத்தும் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப் பட்டுள்ளது. கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 59 பேர் பலியாகியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.