திருவனந்தபுரம், ஏப்.1- கேரளத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 40 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொழில் துறையின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் களை துவக்கி, 2022-23ஆம் ஆண்டை தொழில் முனைவோர் ஆண்டாக கடைப்பிடிக்கும் விழாவை அவர் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், சிறந்த முதலீட்டு சூழல் மற்றும் உட்கட்டமைப்பை உறுதி செய்வதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டு களில் தொழில் துறையில் மட்டும் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பது இதன் நோக்க மாகும். வேலைக்கான பயிற்சி மற்றும் இதர திறன்களுக்கு சிறப்புத் தலையீடுகள் உறுதி செய்யப்படும். அதற்கான அடித்தளத்தை அமைக்க உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல் வலுப் படுத்தப்படும். மாநிலத்தின் தொழில்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைச் சந்தித் துள்ளது.
அதை இன்னும் பலப்படுத்துவதே குறிக்கோள். அறிவு சமுதாயமாகவும், வளர்ச்சி மாதிரிகளை அடையக்கூடிய நாடா கவும் கேரளா மாற்றப்பட வேண்டும். படித்த இளைஞர்களின் ரசனைக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். எம்எஸ்எம்இ திட்டத்தின் மூலம் மூன்று முதல் ஐந்து லட்சம் வேலைகளை உரு வாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.120 கோடி செலவில் செயல் திட்டம் அமல்படுத்தப்படு கிறது. ஓராண்டில் ஒரு லட்சம் தொழில் நிறு வனங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கான தெளிவான திட்டத்துடன் அரசு முன்னேறி வரு கிறது.
இந்த செயல் திட்டம் கேரளாவின் தொழில்துறை வளர்ச்சியை செயல்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று முதல்வர் கூறினார். விழாவில், தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ., மேயர் ஆர்யா ராஜேந்திரன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வி.பி.ஜாய், தொழில் மற்றும் வணிகத் துறை முதன்மைச் செயலர் சுமன் பில்லா, வணிகத் துறை முதன்மைச் செயலர் ஏ.பி.எம்.முகமது ஹனீஷ், வணிகவரித் துறை முதன்மைச் செய லர் ஏ.பி.எம். மற்றும் தொழில்துறை இயக்கு நர் எஸ் ஹரிகிஷோர், கேஎஸ்ஐடிசி எம்டி எம்ஜி ராஜமாணிக்கம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூடுதல் இயக்குநர் கே சுதீர், சிஐஐ கேரளா முன்னாள் தலைவர் பி.கணேஷ், கேஎஸ்எஸ்ஐஏ பொதுச் செயலாளர் கே.ஏ. ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.