“பிரதமர் மோடி யின் பேச்சில் ஒவ்வொரு முறையும், மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 15 லட்சம் போடப் படும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கள் வழங்கப்படும் எனக் கூறினார். யாருக்காவது கிடைத்ததா? ஊழல், வேலைவாய்ப்பு பற்றி இப்போது ஏன் மோடி பேசவில்லை? மோடி பண மதிப்பு நீக்கம் செய்தார், ஜிஎஸ்டி வரியை விதித்தார். இதன்மூலம் யாருக்கு பலன் கிடைத்தது?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.