சென்னை, மார்ச் 31 - கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை அறிக்கையை திங்களன்று (ஏப்.3) அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ருக்மணி தேவி நுண் கலை கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு, அதே கல்லூரி யில் பணி புரியக்கூடிய ஆசிரியர் ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால், சாய் கிரு ஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். மாணவிகள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 30) கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், “கல்லூரி வளாகத்தில் பாலியல் தொல்லை மட்டுமின்றி சாதிய ரீதியாகவும் பாகுபாடு பார்க்கின்றனர்” என்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து மாணவிகளிடம் பேசிய இயக்குநர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க மறுத்துவிட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆதாரம் கேட்டதால் மாணவிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஏப்.6ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து, இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையும் மீறி மாணவிகள் நள்ளிரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவி களின் உறுதியான போராட்டத்தால் விடுமுறை விலக்கிக்கொள்ளப்பட்டது.
காவல்துறை, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கல்லூரி வளாகத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர். மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காததால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என தெரிவித்தனர். இதனிடையே மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா, அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, இந்திய மாணவர் சங்கத் தலை வர்கள் எஸ்.மிருதுளா, எஸ்.ஆனந்த், ரா.பாரதி, அருண், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, வேளச்சேரி பகுதி செயலாளர் எஸ்.ரஃபி உள்ளிட்டோர் பேசினர்.
2ஆவது நாள் போராட்டம்
இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்றும் (மார்ச் 31) போராட்டம் நடந்தது. கல்லூரி வளா கத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஸ்ரீநாத் என்பவர் ஆபாச மாக பேசுவதுடன், அருவருக்கத்தக்க வகை யிலும் நடந்து கொள்வார் வீடியோ காலில் அழைத்து பாலியல் ரீதியில் பேசுவார்’’ என்றும் புகார் கூறினார். இந்நிலையில் கலாஷேத்ரா மாணவர்கள் ஒன்றிணைந்து மின்னஞ்சல் மூலமாக ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் புகார் அனுப்பி உள்ள னர். அதில், குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்காத கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், நடன தலைமை பேராசிரியர் ஜோஸ்த்னா மேனன் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; கல்லூரியின் உள் விசாரணைக்குழு (ஐசிசி)வில் மாணவர்களும் இடம்பெற வேண்டும்; அந்தக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மகளிர் ஆணையம் விசாரணை
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் ஆணையம் இந்த புகாரை, தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கல்லூரி வளாகத்திற்கு சென்று மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மாநில அரசிடம் ஏப்.3ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவிகள், மாணவர்களிடம் பொதுவாக விசாரித்தேன். 12 பேரிடம் தனித்தனியாகவும் விசாரித்தேன். ஏற்கெனவே ஜூம் செயலி வாயிலாக 5 பேரிடம் விசாரித்தேன். மாணவர்கள் அளித்துள்ள வாக்கு மூலங்கள் ரகசியமானவை. சுமார் 100 மாணவி கள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ள னர். 2008இல் இருந்து பாலியல் தொல்லை இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். பழைய மாணவர்கள் 3 பேர் என்னிடம் புகார் தெரிவித்து பேசியுள்ளனர். இவையனைத்தை யும் அறிக்கையாக தயாரித்து திங்களன்று (ஏப்.3) அரசுக்கு வழங்கப்படும். தேசிய மகளிர் ஆணையத்திடம் அளித்த புகாரை ஒரு மாணவி திரும்பப் பெற்றுள்ள தாக கூறியுள்ளார். ஆனால், இப்போது நிறைய மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். 4 பேர் மீது புகார் தெரிவித்துள்ளனர். முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் விசார ணைக்கு வந்தேன். கலாஷேத்ராவில் இயக்கு நர், இணை இயக்குநர் இல்லை. கல்லூரி முதல்வரை அழைத்து பேசினேன். ஏப்.1 அன்று இயக்குநரை அழைத்துப் பேச உள்ளேன். அலுவலகத்திற்கு அவர் வரவில்லையென் றால், மீண்டும் நேரில் வந்துவிசாரிப்பேன். மாணவிகள் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினேன். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஏப்.3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுகுறித்து இயக்குநரிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
உரிய நடவடிக்கை எடுத்திடுக : மாதர் சங்கம் வலியுறுத்தல்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மிணி தேவி கவின் கலை கல்லூரி மாணவிகளுக்கு சில பேராசிரியர்களால் தொடர்ந்து பாலியல் தாக்குதல் நடந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக கல்லூரி நிர்வாகத்திற்கும் உள்புகார் கமிட்டிக்கும் புகார் கொடுத்துள்ளனர். அச்சுறுத்தல் காரணமாக ஒரு சிலர் பின் வாங்குவ தாகவும் தெரிகிறது. பொதுவாக மாணவிகள் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். நீண்ட காலமாக நடந்து வரும் பாலியல் தொல்லைக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவங்களை விசாரிக்க வந்த தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தாமல் நிர்வாகத்திடமும் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட மாணவிகளிடம் மட்டுமே விசாரணை செய்து திரும்பிச் சென்றிருப்பது ஏற்புடையது அல்ல,
காவல்துறையின் மோசமான விசாரணை முறை
கல்லூரி நிர்வாகம் மாணவிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை வரவழைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் பொதுவெளியில் கல்லூரி இயக்குனரையும் போராட்டக் குழுவினரையும் வைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இத்தகைய விசாரணை முறை மிக மோசமானது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மாணவிகள் பலர் கடந்த மூன்று நாட்களாக கொடுத்த புகார் மனுவின் மீது உள் புகார் கமிட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கல்லூரியில் வகுப்பு எடுக்கக்கூடாது எனவும் ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படுவது, பிரச்சனையை தள்ளிப் போடுவதே தவிர தீர்வல்ல. புகார் கொடுத்த மாணவிகள் உள் விசாரணை குழுவில் சுதந்திரமாக சாட்சி சொல்ல உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நிர்வாகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன. இது புகார்தாரர்களை யும் சாட்சிகளையும் அச்சுறுத்தும் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல்கள் விசாரிக்கப்படாமல் மூடி மறைக்கப்படுவதும் புகார் சொல்ல முன் வருபவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒன்றிய கலாச்சாரத்துறை உடனடி யாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.