பீகாரில் “வாக்குரிமை யாத்திரை”
ஒத்திவைப்பு சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெய ரில் வாக்காளர்களை நீக்கி, பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டாக பல்வேறு சதித் திட்டத்தில் ஈடுபட்டு வரு கிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலை வரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவரு மான தேஜஸ்வி இருவரும் இணைந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்க திட்ட மிட்டிருந்த “வாக்குரிமை யாத்திரை (வோட் அதிகார் யாத்திரை)” ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நடைபயணம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இந்த நடைபயணத் துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல மைச்சர் ஷிபு சோரனின் மரணம் இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.