2025 ஜனவரி 29-31 தேதிகளில் நடை பெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில 24வது மாநாட்டிற்காக தயார்படுத்தும் விதமாக, கிளைகள் மற்றும் உள்ளூர் இடைக்குழு மாநாடு கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது, மாநிலம் முழுவதும் சப்டிவிசன் மற்றும் மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி, மாநிலம் முழுவதும் உள்ள 4,244 கிளைகளில் மாநாடுகள் செப்டம்பர் 1, 2024 அன்று தொடங்கி, மாநிலத்தின் சரத் திருவிழா விற்கு முன்னதாக அக்டோபர் மத்தியில் நிறை வடைந்தன. இந்த கிளை மாநாடுகளில் பெரும்பாலானவற்றில் 70 முதல் 100 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட இடைக்குழுக்களின் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகள் மேற்பார்வையிட்டனர். கடந்த ஆண்டுகளில், காவிக் கும்பல்களின் அரை-பாசிச பயங்கரவாதம் காரணமாக சுமார் 30 சதவீத கிளை மாநாடுகள் குறிப்பிட்ட கிளைப் பகுதிகளுக்கு வெளியே நடத்தப்பட வேண்டி யிருந்தது. ஆனால் இந்த ஆண்டு, அத்தகைய நிலை கணிசமாக மாறியுள்ளது. தற்போது, மாநிலத்தின் 309 உள்ளூர் இடைக்குழுக்களின் மாநாடுகளும், மொத்தம் 24 சப்-டிவிசன் குழுக்களில் (எஸ்டிசி) 13 குழுக்களின் மாநாடுகளும் நிறைவடைந்துள்ளன. இரண்டு கட்டங்களிலும் சராசரி வருகை 85 முதல் 95 சதவீதமாக இருந்தது.
விவாதத்தில் பிரதிநிதிகள் கவலை
மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் மற்றும் கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி உள்பட, சப்-டிவிசன் மாநாடு களில் கலந்து கொண்டு வழிகாட்டினர். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது, திப்ரா மோதா வின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்ற மடைந்த பழங்குடி சமூகங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் அரசியல் சார்புகளைக் கடந்து மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை, அதன் தாக்கம் திரிபுராவில் ஏற்படுத்தியுள்ள வகுப்புவாத பதற்றங்கள், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த தாக்குதல்கள் போன்றவை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. துர்காநகர், பானிசாகர், கடம்தலா ஆகிய இடங் களில் வகுப்புவாத வன்முறை வெடித்தது, காவல்துறை நடவடிக்கையில் ஒரு அப்பாவி சிறு வியாபாரி உயிரிழந்த சம்பவம் பற்றியும் கவலை யுடன் விவாதித்தனர். திரிபுராவில் உணவுப் பற்றாக்குறை, வேலை யின்மை, விலைவாசி உயர்வு காரணமாக பழங்குடிப் பகுதிகளில் ஏழை மக்கள் பிரிவின ரின் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பயனாளி திட்டங்களுக்கான அரசு நிதியை பாஜகவின் மண்டல் தலைவர்கள் முறைகேடாக கையாளு வது, ஊழல் மற்றும் பாஜக நிர்வாகிகளின் வாரிசுகளது அட்டகாசம் தலைவிரித்தாடுவது குறித்தும் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். திரிபுரா பழங்குடியினர் பகுதிகளில் சுயாட்சி மாவட்ட கவுன்சில் (டிடிஏஏடிசி) செயல்படாமை, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமக் குழுக்கள் இல்லாத தால் சில திப்ரா மோதா ஆதரவாளர்கள் ஏடிசி நிதியை கையாடுவது போன்றவையும் முக்கிய பிரச்சனைகளாக எழுப்பப்பட்டன.
பழங்குடி மக்களின் எதிர்ப்பு
புஷ்பவந்தா அரண்மனை, ஒரு பாரம்பரிய கட்டடம், முன்னாள் கவர்னர் இல்லமாக உள்ளது. இது முன்பு இடதுமுன்னணி அரசால் பழங்குடி யினர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியக மாக மாற்ற திட்டமிடப்பட்டது. இப்போது அது டாடா குழுமத்திற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக செயல்பட ஒப்படைக்கப்படவுள்ளது. திப்ரா மோதா தலைவர் பிரத்யுத் கிஷோர் தேப் பர்மனின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. இது பழங்குடி மக்களி டையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜகவின் கூட்டாளிகள் வணி கர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் நிறுவன ரீதியாக கப்பம் வசூலிப்பது, அந்தப் பணத்தை பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் சர்ச்சைகள் சில நேரங்களில் வன்முறையாக வெடிப்பது போன்றவற்றையும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மக்கள் மனதில் மாற்றம் இத்தகைய நிலையில், இடதுமுன்னணியைத் தோற்கடித்த தங்கள் கடந்த கால முடிவுக்கு மக்கள் இப்போது வருந்துகிறார்கள்; ஒரு வருடத்திற்கு முன்பு நம்மை விரோதமாக எதிர்கொண்டவர்கள் பலர் இப்போது மரியாதையுடனும் பணிவுடனும் அணுகுகின்றனர் என்றும் மாநாடுகளில் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.