சென்னை, மே 5- அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட் பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக “Google Read Along” என்ற செயலியை பயன்படுத்து வதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக ரூ. 181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று (மே 5) திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்த ளிர் இலக்கியத் திட்டம் ஆகிய மூன்றுத் திட்டங்களின் கீழ் இதுவரை 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சி யாக ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின் கீழ் 5 நூல்கள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் 23 சிறார் நூல்கள்; அமரர் கல்கி எழுதிய மகத்தான நாவலான ‘பொன்னியின் செல்வன்’ஐந்து பாகங்களாக முதல் முறையாக மலையாள மொழியில் ஜி.சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சிறந்த சிறார் படைப்பாளி களான இளங்கோ, ஞா.கலையரசி, வெற்றிச்செழியன், உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதாஜோ, பொற்கொடி, உதயசங்கர், சாலை செல்வம் மற்றும் ஆதி வள்ளியப்பன் ஆகிய 10 எழுத்தாளர்களின் அழகிய ஓவி யங்களுடன் கூடிய 23 சிறார் படைப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
குழந்தைகளின் எழுத்தார்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட மூன்று இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவிமணி விருதும், விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி, கவிமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வி ர.சக்தி, செல்வி ந.சுபிஷா, செல்வன் ம. ருத்ரவேல் ஆகியோருக்கு தமிழக முதல்வர் பரிசுத்தொகையையும், சான்றிதழையும், கேடயத்தையும் வழங்கினார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட் பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக “Google Read Along” என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே தமிழக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியி யல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க. நந்தகு மார்,இல்லம் தேடி கல்வி சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத், கூகுள் நிறுவ னத்தின் அலுவலர்கள் நிதின் காஷ்யாப், ஹேமந்த், அபிநவ் உன்னி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.