சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியத்தைப் படைத்த புகழ் பெற்ற புலவரான தொல்காப்பியர், இயற்சொல், திரிசொல், திசைச்சொல் மற்றும் வடசொல் என இலக்கிய சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் எனக் குறிப்பிட்டார். இவற்றில் வடமொழிகளிலிருந்து வரும் சொற்களான ‘வடசொல்’, தங்களது வட மொழி ஒலியியலை உதறித் தள்ளிவிட்டு தமிழ் ஒலியியலைப் பின்பற்றும்போது தான் அவை தமிழில் பயன்படுத்தத் தகுந்த வையாகும் என அவர் குறிப்பிட்டார்.
பழங்காலத்திலிருந்தே, மொழி வேறு பாட்டின் மீதான தன்னுணர்வு என்பது கிட்டத்தட்ட திராவிட தன்னம்பிக்கையின் மையமாக இருந்து வந்துள்ளது.பழங் காலத்தில் பிராகிருத மொழிகளை பேசி வந்தவர்களிடையேயும் இத்தகைய உணர்வு இருந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண் டில் மகாவீரர் தனது போதனைகளை ஒரு வகையான பிராகிருத மொழியில் (பாலி) அளித்தார். அதன்பின் 18 நூற்றாண்டுகள் கழித்து, புகழ்பெற்ற ஜைன அறிஞரும், புலவரும், கணித மேதையும், தத்துவ வாதியுமான ஆச்சார்யா ஹேமச்சந்தி ரா, ‘தேசினமமாலா’ எனும் நூலை அளித் தார். அவர் வாழ்ந்த காலத்தில் குஜராத்தி மொழியில் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழி வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிரு ந்து வந்த வார்த்தைகளை விட எத்தகைய முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன என்பது குறித்த ஆய்வுக்கட்டுரையாக இந்நூல் இருந்தது.இந்நடைமுறையில், குஜராத்தி மொழிக்கு அவர் ஓர் உறுதி யான வடிவத்தைக் கொடுத்தார். புதிய இந்தியாவின் தன்னாட்சியை வரையறுத்த ‘ஹிந்த் ஸ்வராஜ்’ எனும் நூலை 1909ஆம் ஆண்டு எழுத குஜராத்தி மொழியையே காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். எனவே, ஒவ்வொரு இந்திய மொழியின் விஷயத்தி லும் மொழி உணர்வு என்பது தன்னு ணர்வின் ஓர் அம்சமாகவே இருந்து வருகிறது.
அரசியல் சாசனத்தில் தெளிவு
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தைப் பற்றியோ அல்லது ஒன்பது நூற்றாண்டு பழமையான தேசினமமாலையைப் பற்றியோ சமகால இந்தியர் ஒருவருக்குத் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றதாக இருக் கக் கூடும். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் குடியரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தைப் பற்றி அந்நபர் அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகை யாகுமா? அரசியல் சாசனம் இரண்டு விஷ யங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடு கிறது. முதலாவது, இந்தியா என்பது ‘மாநி லங்களின் ஒன்றியம்’ என்பதாகும். இரண் டாவது, மாநிலங்களுக்கிடையேயான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அலுவல் மொழி என்பது அரசியல் சாச னத்தை ஏற்றுக் கொண்ட நேரத்தில் பயன் பாட்டில் இருந்த மொழியே என்பதாகும். ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புக் கொண்டால்’ மட்டுமே அலுவல் மொழியை ஆங்கிலத்திலி ருந்து இந்தியாக மாற்ற முடியும் என மொழி தொடர்பான பிரிவுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மொழி தொடர்பான விதிகளைப் பாதுகாத்திட நாடாளுமன்றத்திலிருந்து ‘20 பேர்’ மற்றும் மாநிலச் சட்டமன்றங்களிலிருந்து ‘10 பேர்’ என ‘30 உறுப்பினர்களைக் கொண்ட குழு’வை அமைக்க அரசியல் சாசனத்தின் பிரிவு 344(4) குறிப்பிடுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களுக்கிடையேயான விஷய மாகப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையின் மூலம் இக்குழுவின் செயல்பாடுகளும் நோக்கமும் அரசியல் சாசனத்தால் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் பொறுத்தவரை மொழி தொடர்பான பணி என்பது கல்வி, கலாச்சார வெளிப்பாட்டை ஊக்குவிப்பது என வகுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தைப் பொறுத்த வரை, ‘யூனியன்’ உடனான (ஒன்றிய அரசு டனான) மாநிலங்களின் உறவுகளைப் பாதுகாப்பது, மொழி சிறுபான்மையின ரின் மொழிவாரி உரிமைகளைப் பாது காப்பது மற்றும் இந்தியை ஊக்குவிப்பது என இப்பணி விரிவடைகிறது. இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தி மொழியை ஊக்குவிப்பது என்பது ‘பிற மொழிகளோடு குறுக்கீடு செய்யாது இருக்க வேண்டும்’ என அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது.
மொழியின் வீழ்ச்சி குறித்த தரவுகள்
இந்தி மொழிக் குழுவிற்கு இரண்டு முக்கிய மான கேள்விகள் உள்ளன. அரசியல மைப்பின் விதிகளின் வெளிச்சத்தில் இக் கேள்விகள் சரியாகப் புரிந்து கொள்ளப் பட வேண்டும். “கடந்த 70 ஆண்டுகளில் இந்தி மொழி ஏதேனும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறதா? மேலும், அத்தகைய வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அது பிற அட்டவணை மொழிகளின் வளர்ச்சி யில் குறுக்கிடுகிறதா?” என்பவையே அக் கேள்விகளாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி பல விவரங்களை நாம் அறிந்து கொள்ள லாம். 2011ஆம் ஆண்டில், இந்தி மொழி பேசு பவர்களின் எண்ணிக்கை மொத்தம் 52.83 கோடியாக இருந்தது. அதாவது, மொத்த மக்கள் தொகையில் 43.63 சதவீதம் ஆகும். 1971ல் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 20.27 கோடியாகும். அதா வது, மொத்த மக்கள் தொகையில் 36.99% ஆகும். 2001-2011 வரையிலான 10 ஆண்டு காலத்தில், மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆகும். அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப் படும் மொழிகளின் பட்டியலில் இரண்டா வது இடத்தில் உள்ள வங்காள மொழி வீழ்ச்சியையே அடைந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் 8.30% இந்தியர்கள் வங்காள மொழியை பேசி வந்தனர். 2001ல் இது 8.11% ஆகவும், 2011ல் 8.03% ஆகவும் குறைந் தது. 1991ஆம் ஆண்டில் 7.87% என்ற விகிதத்திலி ருந்து 2001ல் 7.19% ஆகவும், 2011ல் 6.7% ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ள தெலுங்கு மொழியின் நிலையும் இதுவேயாகும்.
மராத்தி மொழியின் நிலையும் இதிலி ருந்து மாறுபட்டதாக இல்லை – 7.45% (1991), 6.99% (2001), 6.86% (2011) என்பதே அதன் நிலை. நாட்டில் எஞ்சியிருக்கும் தொன்மையான மொழியாகிய தமிழ் மொழி, உள்துறை அமைச்சகத்தின் கவ னத்தை சிறிதளவாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால், வங்காளம், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலிருந்து அது மாறுபட்டதாக இல்லை என்பதே உண்மையாகும். 1991ஆம் ஆண்டில் தமிழ் பேசுபவர்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் 6.32% ஆகும். 2001ல் 5.91% ஆகவும், 2011ல் 5.70% ஆகவும் உள்ளது. பத்தாண்டு காலத்தில் வளர்ச்சியை (சிறிதளவே என்றாலும்) எட்டியுள்ள ஒரே பிரதான மொழி குஜராத்தி ஆகும். மேலும், சிறியதும், அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளில் நல்ல வளர்ச்சி யைக் காட்டியுள்ள ஒரே மொழி சமஸ்கிருத மாகும். 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப் படும்போது, நாட்டில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தி மற்றும் சமஸ்கிருதம், மற்றும் குஜ ராத்தி நீங்கலாக, எட்டாவது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளின் நிலை யும் மோசமாகவே இருக்கும். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே ஆகும். இந்நிலையில், இந்தி தவிர இதர இந்திய மொழிகள் வீழ்ச்சி குறித்தும், 9ஆம் நூற்றாண்டிலிருந்து வாழும் மொழியாக இல்லாது போன சமஸ்கிருதத்தின் வளர்ச்சியின்மை குறித்தும் இந்தி மொழி ஊக்குவிப்பிற்கான நாடாளுமன்றக் குழு தனது கவலையை தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தி மொழி வளர்ச்சி – கட்டுக்கதையே!
மற்ற எல்லா மொழிகளும் ஒப்பீட்டள வில் சரிவையே காட்டுகிறபோது, இந்தி மொழி மட்டும் எப்படி நிலையான வளர்ச்சி யைப் பதிவு செய்கிறது? 2011ஆம் ஆண்டில் இந்தி மொழியைப் பேசுபவர்களாகப் பதிவு செய்யப்பட்ட 52.83 கோடி பேர்களில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை மட்டும் இடம்பெறவில்லை; மாறாக, 50க்கும் மேற்பட்ட இதர மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கியுள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுவதாக சொல்லப்படுகிற- சினிமா, இலக்கியம், செய்தித்தாள்கள், பாடல்கள், நாடகம் மற்றும் வெளியீட்டுத் துறைகளில் வளர்ச்சி யடைந்து வருவது கண்கூடாகத்தெரிகிற- போஜ்புரி மொழி, இந்தி மொழி பேசுபவர்க ளின் எண்ணிக்கையோடு இணைக்கப்பட் டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தர் கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பெரும்பா லான மொழிகளும் இந்தித் தொகுப்பிற் குள் தள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதானமாகவும், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பேசப்படு வது பவாரி மொழியாகும். பவாரி மொழியைப் பேசும் பெரும்பாலானவர்க ளுக்கு இந்தி சிறிதளவு கூட புரியாது என்ற போதும், அவர்கள் ‘இந்தி’ மொழி பேசு பவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
ஆக, ‘இந்தி மொழி வளர்ச்சி’ என்பது கட்டுக்கதையே ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மேற்கூறப்பட்ட இதர மொழிகளை இந்தி மொழியோடு இணைக்காதிருந்தால், இந்தி மொழி யைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 39 கோடியாக – அதாவது 2011ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் 32 சதவீதத்திற்கும் சிறிது குறைவாக - சரிந்திருக்கும். மேலும், அட்டவணையில் இடம்பெற்றுள்ள இதர மொழிகளிலிருந்து மிகவும் வேறு பட்டதாக இருந்திருக்காது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தி மொழி குறித்த தரவுகள் உண்மையான நிலையை பிரதிபலிக்கச் செய்வது குறித் தும் இக்குழு கவலை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலம் பேசுபவர்கள் குறித்த தரவு மிகவும் உண்மையானதாக உள்ளது. மொத்தம் 3,88,793 இந்தியர்கள் (2,59,678 ஆண்கள் மற்றும் 1,29,115 பெண்கள்) ஆங்கிலம் மட்டுமே பேசுவதாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரி விக்கிறது. அட்டவணையில் இடம் பெற் றுள்ள மொழிகளில் மிகவும் குறைவாகப் பேசப்படும் மொழியோடு இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 17.61 லட்சம் பேர் மணிப்பூரி மொழியையும், 14.82 லட்சம் பேர் போடோ மொழியையும் பேசுகிறார் கள். இது குறித்து எந்த கருத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இந்த புள்ளிவிவரங்கள் பற்றி பெருமை கொள்ள எதுவுமில்லை.
ஒளிரும் இதர மொழிகள்
இந்த உலகில் உள்ள எந்தவொரு சிறிய அல்லது பெரிய மொழியைப் போல் இந்தியும் ஓர் அழகான மொழியாகும். இந்தித் திரைப்படம் இந்தியாவிற்குக் கொஞ்சம் பெருமையையும், கொஞ்சம் அந்நிய செலாவணியையும் கொண்டு வந்துள்ளது. இந்தி இலக்கியம் செழுமை வாய்ந்ததாகவும், அது பற்றி குறிப்பி டும்போது பெருமையைத் தூண்டு வதாகவும் உள்ளது. இருந்தபோதும் கூட, எட்டாவது அட்டவணையில் இணைக் கப்பட்டுள்ள மொழிகளில் இது இளைய மொழிகளுக்குள்ளேயே வருகிறது என்ப தும் உண்மையாகும். மறுபுறத்தில், தமிழ், கன்னடம், காஷ்மீரி, மராத்தி, ஒடியா, சிந்தி, நேபாளி மற்றும் அசாமி ஆகிய மொழி கள் மிக நீண்ட, பழமையான வர லாற்றைக் கொண்டுள்ளன. அறிவின் மொழியாகவும், தமிழ், கன்னடம், வங்கா ளம் மற்றும் மராத்தி (அவற்றின் ஏராள மான கலைக்களஞ்சியங்கள் மற்றும் வர லாற்று இலக்கியங்களோடு) ஆகிய மொழி கள் இந்தியை எளிதாக மிஞ்சுகின்றன. ஒரு மொழி படிப்படியாகவே வளர்கிறது. அதிகாரப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் வளருமாறு கட்டா யப்படுத்த முடியாது.
அமித்ஷாவின் நோக்கம் என்ன?
இந்தியின் வரலாறு, இந்தியாவின் பன்மொழி, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் பல மாநிலங்களின் மொழி உணர்வு ஆகியன அனைத்தும் மொழியியல் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள இக்குழுவையும், அலுவல் மொழிக் குழுவையும் வழிநடத்தியிருக்க வேண்டும். திடீரென ‘இந்தி இந்தியா’ விற்கு அழைப்பு விடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தூண்டியது எது? 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 121 கோடி யில் 52 கோடி பேர் இந்தி பேசுவதாக அதி கரித்துக் காட்டப்பட்டபோதும், நாட்டில் இந்தி பேசும் மக்கள் மொழிவாரி பெரும் பான்மையினர் அல்ல. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே கூட 69 கோடி பேர் இந்தி மொழியைப் பேசாதவர்கள் என்பதுதான் உண்மை. அப்படியானால், இந்தி, இந்தியாவின் பிரதான மொழி அல்ல. ஆனால், 2024ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மிக முக்கிய மான பகுதியாக உள்ள இந்தி பேசும் மாநி லங்களில் உள்ள இளைஞர்களை பாதிக்கும் மிகப் பெரிய அளவிலான வேலையின்மைக்கு ஒரு வலி நிவாரணி யாக, இந்தி மொழியின் பெருமையைத் தூண்டும் அமித்ஷாவின் முயற்சி தேவைப் படக் கூடும். இருந்தபோதும் கூட, இந்துக் களை அணி திரட்ட பாகிஸ்தானை பாதுகாப்பு பணிகளுக்கு அச்சுறுத்தலாக முன்னிறுத்துவதும், ஆங்கிலத்தை தேச விரோத மொழியாக சித்தரிப்பதும் இனி இந்தி பேசும் மக்களை அணி திரட்ட உத விடாது என்பதை உள்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை.
ட்டுரையாளர் : இந்திய மக்கள் மொழியியல் சர்வேயின் முதன்மை ஆசிரியர்,
நன்றி : 14-04-2022 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தமிழில் : எம்.கிரிஜா