states

img

கந்துவட்டியின் கோரப்பிடியில் இருந்து விசைத்தறி தொழிலாளர்களைப் பாதுகாப்போம்! - எம்.பிரபாகரன்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளை யம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான ஜவுளிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையோ தற்போது அபாயகரமான சூழலில் உள்ளது.  விசைத்தறித் தொழிலாளி ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை  நான்கு முதல் ஆறு விசைத்தறிகளை இயக்கினால், வாரந்தோறும் தோராயமாக ரூ.1500லிருந்து ரூ.2 ஆயிரம் வரையிலான கூலி கிடைக்கப் பெறும்.  நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்க ளின் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு, ஜவுளித்தொழிலில் ஏற்பட்ட தேக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விசைத்தறித் தொழி லாளர்களின் செலவுக்கேற்ப வருவாய் இல்லாத தால், கூடுதலாக 10 முதல் 12 விசைத்தறிகள் வரையும் இயக்கி வேலை செய்து வந்தனர். அப்போதும் கட்டுப்படியாகாததால், வேறு வழி யின்றி, திடீரென ஏற்படும் குடும்பச் செலவுக ளுக்கு வெளியிடங்களில் கடன் பெற துவங்கு கின்றனர்.

கந்துவட்டிக்காரர்களின் அட்டூழியம்

யிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் பிடித்தம் போக  900 ரூபாயை தொழிலாளர்களின் கையில் தருவார்கள்.  10 வாரங்கள் ஒரு தொழிலாளி இடை விடாது கட்டி வர வேண்டும் என்ற நிலை இருந் தது. தற்போது ஆயிரம் ரூபாய் கடனுக்கு 250 ரூபாய் எடுத்துக் கொண்டு 750 ரூபாய் தான் தொழிலாளியின் கையில் கொடுக்கிறார்கள். அதை அந்த தொழிலாளி 10 வாரங்களில் இடை விடாமல் 100 ரூபாயாக கட்ட வேண்டும்.  இடை யில் சில வாரங்களுக்கு கட்ட முடியாத நிலை ஏற்படும்பொழுது அபராதத்தொகை தனியே செலுத்த வேண்டும். இதில் கொடுமையான விஷயம் என்னவெனில், அபராதத்தொகை என்ற பெயரிலே இவர்கள் வாங்கிய அசலுக்கு மேலேயே பணம் கொடுத்து இருப்பார்கள். ஆனால், அது ஏற்கனவே வாங்கிய கடனில் வராமல் தனிக்கணக்காக வரும். ஆயிரம் ரூபாய்க்கு 250 ரூபாய் வட்டியாக எடுத்துக் கொள்கிறார்கள். என்றால் 5000 ரூபாய்க்கு, 10,000 ரூபாய்க்கு எவ்வளவு தொகை வரும் என்று கணக்கிடும் போது அதிர்ச்சியாக உள்ளது.  பல்வேறு காரணிகளால் வாங்கிய கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்படும்பொழுது, தொழி லாளர்களை பணம் கொடுத்தவர்கள் தகாத வார்த்தையில் பேசுவது, மிரட்டுவது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வது, இரு சக்கர வாகனம் செல்போனை பறித்துச் செல் வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கால அவகாசம் கேட்டாலும் ஏற்றுக் கொள்வதில்லை

கடனை அடைக்க கடன் 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் 150 முதல் 180 வரை மட்டுமே முறையாக பதிவு செய்யப் பட்டு இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மீத முள்ள அனைத்துமே சட்டவிரோதமான முறை யில் எவ்வித தொழில் செய்வதற்கான பதிவுக ளும் இன்றி முறைகேடாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது.  ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி கடனை எவ்வாறு கொடுக்க வேண்டும், வட்டிக் கணக்கு என்ன, அதை எவ்வாறு திரும் பப்பெற வேண்டும், அதில் உள்ள அணுகுமுறை கள் என்ன, சட்ட நுணுக்கங்கள் என்ன, மாலை 6 மணிக்கு மேல் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்பது போன்ற எவ்வித ஒழுங்கும் இன்றி கந்துவட்டிக்கா ரர்கள் கடனை வசூலிக்க அராஜகம் செய்வதால்  பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. கந்துவட்டிக் காரர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைக்கும் தொழிலாளர்கள் தங்களை அறியாமலே அடுத்ததாக நுண்நிதி நிறுவனங்களின் வலையில் வீழ்கின்றனர். நுண் நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே 10,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுக்கின்றனர். ஒன்று, இரண்டு வருடங்கள் நன்றாக கடனை கட்டி னால் ஒரு லட்சம் ரூபாய் வரை மீண்டும் கடனாக கொடுக்கின்றனர். அந்த கடன் தொகையானது வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் கட்டும் வகையிலும், குழுக்கடன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கூடுதலாக கடன் தேவைப் படும் தொழிலாளர்கள் மற்றொரு தொழிலா ளியை பயன்படுத்தி கடன் பெற்று அதை தங்க ளுடைய குடும்பத் தேவைகளுக்காகவும், மற்றொரு கடனை அடைப்பதற்கும் பயன்படுத்து கின்றனர். இதிலும் புதிதாக பிரச்சனைகள் உரு வாகி கடன் வாங்கிக் கொடுத்த தொழிலாளிக்கு சிக்கல்கள், பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது மட்டு மின்றி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் என்ற பெய ரிலும், தனிநபர்கள் மூலமாக இயக்கப்படும் நிதி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

காவல் துறையின் தயக்கம்

பெண்களை மட்டுமே மையப்படுத்தி இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் பெறப்படும் கடன்கள் குறித்த பிரச்சனை சொல்லி மாளாது. 10 பேர் கொண்ட குழுவில் ஒருவரோ அல்லது இருவரோ பணம் கட்டாத நிலை யில் மற்ற பெண்களிடம் கூடுதலாக சேர்த்து பணம் கட்டச் சொல்வது, பணம் கட்டத் தவறும் பட்சத்தில் பெண்களை ஆபாசமாக பேசுவது, தவ றான பாதைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்வது - என  நிதி நிறுவனங்களின் நெருக்க டியாலும் அடாவடிப் போக்கினாலும், மிரட்டப்படு வதாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வது; இரவோடு இர வாக ஊரை விட்டுச் செல்வது போன்ற  கட்டா யத்திற்கு தள்ளப்படுகிறார்கள். கடன் தொல்லை குறித்து காவல் நிலையத் தில் புகார் அளித்தாலும், புகார் அளித்தவரையே போலீசார் மிரட்டுவதும், “நீ என்ன செய்தாலும், கடனை அடைத்துத் தான் தீர வேண்டும்” என வற்புறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. காவல் நிலையத்திற்கு சென்றால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மத்தியில் குறைந்துவிட்டது. தொடர்ந்து அதிகளவு கடன் சம்பந்த புகார்களும் வருவதால் போலீசார் புகா ரைப் பெற தயக்கம் காட்டுகின்றனர்.  இத்தகைய மோசமான கடன் தொல்லையால் பள்ளிபாளை யம், குமாரபாளையத்தில் விசைத்தறித் தொழி லாளர்கள் தற்கொலை என்பது மிக சர்வ சாதார ணமாக மாறிவிட்டது. போலீசாரும் குடும்ப பிரச் சனை அல்லது வேறு ஏதேனும் காரணங்களை காட்டி தற்கொலை  என வழக்கை முடித்து விடு கின்றனர்.

கொத்தடிமை போன்ற நிலை

அதுமட்டுமின்றி பள்ளிபாளையம் அடுத் துள்ள வெடியரசம்பாளையம் மோடமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் விசைத்தறி தொழிலா ளர்கள் முன் பாக்கி பெற்ற கணக்கில் பல ஆண்டு களாகவே மிகக் குறைந்த கூலியில் விசைத்த றித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்ற னர். உதாரணமாக மற்ற இடங்களில் ஒரு மீட்டர் ஜவுளிக்கு ஒரு ரூபாய் வழங்கினால், இவர்கள் 75 பைசா அல்லது 80 பைசா மட்டுமே வழங்கு கின்றனர். அவர்களின் வறுமையை பயன் படுத்தும் விசைத்தறி உரிமையாளர்கள், அவர்க ளுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கின்றனர். வாரந்தோறும் 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்கின்றனர். இத்தகைய நிலை நீடிப்ப தால் குறைந்த கூலியையும் பெற்றுக் கொண்டு கடனையும் அடைக்க முடியாமல், தொழிலாளர் கள் எளிதாக வேறு விசைத்தறிக் கூடங்களுக்கு, மாற்று வேலைகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஒரே விசைத்தறி கூடத்தில் கிட்டத்தட்ட கொத்தடிமை போல பணியாற்றுகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் வேறு எங்கும் செல்ல முடியாத வகையில் விசைத்தறிக் கூடத்தின் அருகிலேயே வீடுகளை வாடகை க்கு விட்டு அங்கேயே தங்க வைத்து விடுகின்ற னர். தொழிற்சங்கம் வலுவாக உள்ள பகுதிக ளில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சட்டப் படியான போனஸ் உள்ளிட்ட எதுவுமே வெடியர சம்பாளையம் பகுதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

கந்துவட்டியின் கோரமுகம்

தற்போதைய சூழலில் முன்பைக் காட்டிலும் அதிகளவு குரூரத்துடன் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கந்துவட்டி கும்பல் மற்றும் மைக்ரோ  பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் அடாவடி போக்கு அதிகரித்து வருவதால் இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.  கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவ னங்களின் அடாவடிப்போக்கு பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் மட்டும் நிலவி வருவது அல்ல! இது நாமக்கல் மாவட்டத்திலும், ஏன் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் கூட  பல்வேறு வடிவங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்க ளில் தலைவராக சுஜாதா என்ற பெண், வேறு  சில பெண்களுக்கு பணம் வாங்கிக் கொடுத்துள் ளார். அந்த பெண்கள் செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனை கட்டு வதற்காக வட்டிக்கு பணம் தரும் கவிதா என்ற பெண்மணியிடம் சுஜாதா கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து வாங்கிய பணத்திற்கு மேலேயே வட்டி கட்டிய நிலையிலும், இன்னும் கடன் உள்ளதாக கவிதா தரக்குறைவாக பேசியதால், மன முடைந்த சுஜாதா  செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வை ஏற் படுத்திய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விடாப்பிடியான போராட்டத்தின் கார ணமாக கவிதா, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

தோழர் வேலுச்சாமி படுகொலை

கந்துவட்டி கொடுமையின் கோர முகத்தை  இப்போதும் பள்ளிபாளையம் தோழர் வேலுச் சாமியின் படுகொலை நினைவுபடுத்துகிறது. 

இன்று சிறப்பு மாநாடு

எனவே,தனியார் நுண் நிதி நிறுவனங்கள், கந்துவட்டி நிறுவனங்களின் அடாவடிப்போக்கி க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வை மேம் படுத்தும் வகையில், அரசே குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும்.விசைத்தறித் தொழிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை களை ஒன்றிய, மாநில அரசுகள் மேம்படுத்தி, இந்தத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை சார்பில் சிறப்புக்குழு அமைத்து, பள்ளிபாளை யம் வட்டாரத்தில் விசைத்தறித் தொழிலாளர்க ளுக்கு நிலவும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்துச் செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 22 (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு  பள்ளிபாளையம் பெரிய காடு பழனியப்பன் பாவாயம்மாள் மண்டபத்தில் நடைபெறுகிறது.