ஜவகர்லால் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தரான சாந்திசிரி துலிபுடி பண்டிட், இந்திய தேசியம் என்ற கருத்து அரசிய லமைப்புச் சட்டத்திலிருந்து வந்ததல்ல, அது பண்டைய காலத்திலிருந்தே உள்ளது. ‘(The idea of indian nationalism did not come from the constitution, it has ancient roots)’ என்ற தலைப்பி லான ஒரு கட்டுரையை மே 24 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். இந்திய வரலாற்றைப் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையே சிறிதும் இல்லாமல் ஆர்எஸ்எஸ்- பிஜேபி- ன் கண்ணோட்டத்தின் அடிப்ப டையிலேயே கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் எழுதியுள்ளார். வேதத்திலி ருந்தே இந்திய நாகரிகம் தொடங்குவ தாகவும் பார்ப்பனிய மீட்டுருவாக்க வர லாறே இந்திய வரலாறு என்றும் கூறு கிறார். சிவனின் உடுக்கையிலிருந்தே உலகம் தோன்றியது என்பது போன்ற பல அபத்தங்கள் அக்கட்டுரையில் உள்ளன.
இந்தியாவின் பல உயர்கல்வி நிலையங்களின் உயர் பதவிகள் இது போன்ற நபர்களால் நிரப்பப்படு கின்றன. இவர்கள் ஒன்று வெளிப்படை யான ஆர்எஸ்எஸ்- பிஜேபி ஆதரவா ளர்களாக இருக்கிறார்கள் அல்லது மறைமுகமாக ஆர்எஸ்எஸ்- பிஜேபி (என்இபி) திட்டத்தை கல்லூரிகளுக்குள் அமல்படுத்துபவர்களாக இருக்கி றார்கள். இதில் ஜேஎன்யு, டெல்லி பல்கலை., போன்றவை முதல்வகை, தமிழகப் பல்கலைக்கழகங்கள் இரண்டாம் வகை. தங்களுடைய பாசிசத் திட்டத்திற்கு தகுந்தாற்போல இந்திய வரலாற்றை மாற்றி எழுதும் வேலையை செய்து வருகிறது மோடி அரசு. அதற்கான பொதுக்கருத்தை உருவாக்க துணை வேந்தர்கள், பதிவாளர்கள், மற்ற உயர் பதவிகளில் பேராசிரியர்க ளாக உள்ள தங்களுடைய அறிவுக்கூலிப் படையினரை பணியமர்த்துவதன் மூலம் இந்த வேலை நடந்து வருகிறது. போலி வரலாறு பேசுவோரிடம் கவனமாக இருப்போம்…
- கே.ராஜூ