விருதுநகர், ஜூன் 6- விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் லட்சுமி திருமண மண்டபத்தில் ஞாயிறு மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பட த்தை திறந்து வைத்து, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சத்தை அவரது துணைவியார் பத்மினியிடம் வழங்கினார். மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, மதுக் கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், பி.சுகந்தி, எம்.மகாலட் சுமி, மூத்த தோழர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். நகர் செயலாளர் எல்.முருகன் நன்றி கூறினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, வீ.மாரியப்பன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், தோழர் எம்.என்.எஸ். மறைவுச் செய்தியானது, அனைவரின் மனதும் முறிந்து போகும் அளவிற்கு வலி ஏற்படுத்தியது. ஈடு செய்ய முடியாத இழப்பு. தீக்கதிரின் பொறுப் பாளராக நீண்ட காலம் இருந்தார். மீண்டும் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என கட்சி கூறிய போது ஏற்றுக் கொண்டு, அதில் மாற்ற த்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது அவரது தனிச் சிறப்பு. தென்மாவட்டங்களில் சாதியக் கலவரங் கள் ஏற்பட்டபோது, மக்களிடையே ஒற்றுமை யை ஏற்படுத்திட பல்வேறு இயக்கங்களை நடத்தியவர் தோழர் எம்.என்.எஸ். கட்சிக்கு உள்ளே அவர் ஆற்றியது இமாலயப் பணி. அது வெளியே தெரியாது. தமிழக வரலாற்றை பற்றி தீர்க்கமாக அறிந்தவர். அவரது அழுத்தமான விவாதங்களை, கருத்துக்களை, நயம்பட பேசி அனைவரை யும் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வார். எப்போ தும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பிறரை முன் நிறுத்துபவர். இப்பண்பை நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். வெகுஜன வசூலில் விருதுநகர் மாடலை தமி ழகம் முழுவதும் பின்பற்றச் செய்தவர். கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காக ஆற்றிய பணிகள் ஏராள மானவை. இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது.
மோடி அரசு வந்த பின்பு, சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள் ளது. பள்ளிக்கு, கல்லூரிக்கு, வியாபாரத் திற்கு செல்ல முடியவில்லை. சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் மதக் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் வழிபாட்டுத்தலம் பாது காப்புச் சட்டம் கொண்டு வந்த போது, உச்சநீதி மன்றமே வரவேற்றது. இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்குப் போட்டுள்ளனர். இச்சட்டம் ரத்து செய்யப்பட்டால், மக்களைக் கூறு போடும் வேலை இன்னும் தீவிரமாகும். பாஜக அரசின் தவறான கொள்கையால் விவசாயம், என்ஜினியரிங், ஜவுளி போன்ற தொழில்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. அமைதியாக உள்ள தமிழகத்தில் ஆதீ னங்கள் உள்ளிட்ட சக்திகளை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆயிரம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற மோடி அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, தமிழக அரசு மீது குற்றச்சாட்டு களை சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்தியாவையே நாசப்படுத்து கிற பாஜக-வைப் பார்த்து கேள்வி எழுப்ப அண்ணாமலை தயாரா?.
16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி யபோது அண்ணாமலை எங்கே ஊர்வலம் போனார்? விலை உயர்வுக்கு முழுமையான காரணம் ஒன்றிய மோடி அரசு தான். இந்த நாட்டு மக்களை மத அடிப்படை யில் பிரிப்பது, சாதிய ரீதியாக பிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆர்எஸ்எஸ், பாஜக. அப்படி இருக்கையில் இந்தியாவை ஒரே குடும்பமாக மாற்றுவது பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும்தான் என ஆளுநர் கூறிய கருத்து என்பது மிகப் பெரிய ஜோக் ஆகும். அரசாங்க திட்டங்களை இந்தி அல்லது சமஸ்கிருத பெயரில் தான் வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது தவறு. எந்த ஒரு மொழியையும் எவரும் விரும்பினால் படிக்க லாம். அதற்கு அரசாங்கம் உதவவேண்டும். ஆனால், இந்தியை கட்டாயம் படிக்கவேண் டும் எனத் திணிப்பதைத் தான் அனைவரும் எதிர்க்கின்றனர். எனவே இந்தியாவின் இறை யாண்மையை, பன்முகத் தன்மையை, தொழில் களை, சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் கடமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.