கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையைடுத்து ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்தனர். தொடர்ந்து, லேசானதாகப் பெய்த சாரல் மழை மற்றும் மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. மேலும் ஞாயிறன்று மதியம் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல்மலை பகுதியான பூம்பாறை, குண்டாறு பகுதியில் மரம் விழுந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.