states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத்  ரயில் சேவை செப்.24 அன்று தொடங்கப்பட வுள்ளதாகவும், பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அக்டோபர் 23 முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கூட்டு றவு வங்கியில் புதிதாக 9.91லட்சம் கணக்கு கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கூட்டு றவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்துள்ள விவகாரத்தில், 2 புலி கள் நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 புலி கள் மற்ற புலிகளுடன் சண்டையிட்டதால் என 4 புலி கள் உயிரிழந்துள்ளன; மேலும் சீகூர் வனப்பகுதி களில் தாய் புலி விட்டுச்சென்றதால் 6 குட்டிகள் உயி ரிழந்ததாக முதுமலை காப்பக கள இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 25 பேர்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேருக்கு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவையைச் சேர்ந்த கோகுல் நடராஜன்  முதல் பரிசாக ரூ.25 கோடியை வென்றுள்ளார். கோகுல் நடராஜன் ரூ.5000 கொடுத்து லாட்டரி சீட்டு  வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் தடுப்பணை யில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற நாற்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (23) தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், முரளி (24) என்பவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்தி ருந்தாலும் எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், ஏற்க னவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் சலுகையை வழங்கியுள்ளது ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலை யை கரைக்கும் போது அரிசிபாளையம் பகுதியைச்  சேர்ந்த வீரா (26) என்பவர் நீரில் மூழ்கி பலியானார்.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை கோரி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு வியாழ னன்று விசாரணைக்கு வந்துள்ளது.