states

குண்டர் சட்டம்: டிஜிபி எச்சரிக்கை

சென்னை, செப்.25- பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ ) அலுவ லர்கள் கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள், சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங் களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பேருந்து மீது  கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மண்ணெண் ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச்சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களைக் குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டுகைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. மண் ணெண்ணெய் பாட்டில் வீசிய சில குற்றவாளிகள் கைது செய்யபட் டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசார ணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் ஆர்ஏஎப் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவு கள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரைக் கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;