நீங்கள் பாரத மாதாவைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். யார் உண்மையான பாரத மாதா? இந்துக்களையும், இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும், பார்சிகளையும், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரையும் பெற்றெடுத்தவரே அந்த பாரத மாதா.
ஒரு புறத்தில் இந்திய பாரத மாதாவை இந்துத்துவ பாரத மாதாவாக மாற்ற முயல்கிறீர்கள். மறுபுறத்தில் காந்தியும் திலகரும் முன்வைத்த ஜெய் ஹிந்த் முழக்கத்தையோ, பகத்சிங் முன்வைத்த இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தையோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். அவர்களெல்லாம் உண்மையான தேசபக்தர்கள் இல்லையா? தேசபக்திக்கான உங்கள் வரையறை தான் என்ன?