states

தடுப்பூசி தான் நம்மை காக்கும் ஆயுதம்

சென்னை, ஜூன் 12-  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் சிறித ளவு தொற்றுகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.  எனவே ஆரம்பத்திலேயே அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக் கைகள் எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   இதையடுத்து மாநிலம் முழுவதும்  மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 30-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம்  முழுவதும் ஞாயிறன்று (ஜூன் 12) நடை பெற்றது. சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் நடைபெற்றது.  ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை  தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து திருநின்றவூர், தாமரைபாக்கம் காட்டுக் காலை, கன்னிகாபுரம் ஆகிய இடங்க ளில் நடந்த முகாம்களை பார்வை யிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வருவதால் நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் சீரிய நடவடிக்கையால் கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இல்லை. தடுப்பூசி தான் நம்மை காக்கும் ஆயுதம், எனவே 100  விழுக்காடு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு அரசு  செயல்பட்டு வருகிறது என்றார்.  இதுவரை 11 கோடியே 19 லட்சத்து, 22 ஆயிரத்து 568 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதாவது 93.91 விழுக்காடு பேர் முதல் தவணையும் 83.11 விழுக்காடு பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இன்னும் 1 கோடியே 64 லட்சத்து 15 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அவர்கள் 42 லட்சத்து 54 ஆயி ரத்து 238 பேர் முதல் தவணை தடுப்பூசி யும், ஒரு கோடியே 21 லட்சத்து 60 ஆயிரத்து 824 பேர் 2-ம் தவணை தடுப்பூசி யும் போடவில்லை. இதுவரை நடை பெற்ற 29 முகாம்கள் மூலம் மட்டும் 4  கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 634 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.