states

மியான்மரில் வதைபடும் தமிழ் இளைஞர்கள்!

சென்னை,செப்.18- மியான்மருக்கு கடத்திச்செல்லப்பட்டு வதைக்கப்படும் தமிழ் இளைஞர்களை, ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட்டு மீட்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தாய்லாந்துக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை, மியான்மர் நாட்டின் மியாவாடி நகருக்கு கடத்திச் சென்று,  கட்டாயப்படுத்தி சட்ட விரோதமான வேலை களில் ஈடுபடுத்துவது பற்றிய அதிர்ச்சிதரும் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் வரலாறுகாணாத வேலையின்மையை எதிர்கொண்டு வரு கிறோம். நன்கு படித்த ஏராளமான இளை ஞர்கள் ஏதாவதொரு வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்தச் சூழலை பயன்படுத்தி, வெளிநாட்டில் வேலை தருவ தாக கவர்ச்சி விளம்பரங்கள் செய்யும் ‘முக வர்கள்’ தமிழ்நாட்டில் இருந்தும், புதுவை யில் இருந்தும்  ‘கணினி உள்ளீட்டு பணி’ தருவதாகவும், நல்ல சம்பளம் கொடுப்ப தாகவும் சொல்லி, முதலில் தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். 

ஆனால், அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு  கடத்திச் சென்று அடைத்து வைக்கப் பட்டுள்ளதுடன், சட்டவிரோத பணிகளைச்  செய்ய நிர்ப்பந்தம் செய்து, அடித்து வதைத் துள்ளார்கள். இதுபற்றி வெளியாகியுள்ள  வீடியோவில், இளைஞர்களுக்கு  அடிப்படை மனித உரிமைகள்  மறுக்கப் பட்டிருப்பதையும், கடுமையாக  அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்டிருப்பதும் கண்ணீருடன் இளைஞர்கள் விவரிக் கிறார்கள். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனு ப்பிவிட்டு, செய்வதறியாமல் தவிக்கும் பெற் றோர்களும் தங்கள் கையறு நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்கிறார்கள். இந்திய அரசும், வெளியுறவுத்துறையும் துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கி யுள்ள இளைஞர்கள் தொடர்பான விபரங் களை வெளிக் கொண்டுவர வேண்டும். ஆபத்தில் உள்ள இளைஞர்களை பாது காத்து மீட்பதுடன், வெளிநாட்டு வேலை க்கு ஆள் பிடிக்கும் முகவர்களை முறைப் படுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

;