states

உண்மையான சிவசேனா எது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யக் கூடாது!

புதுதில்லி, ஜூலை 26- மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கி ரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடத்தி வந்த ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி  ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் வெளியேறிய சிவ சேனாவின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக வுடன் இணைந்து ஆட்சியை அமைத்தனர். இதேபோல நாடாளுமன்றத்திலும், 12 சிவசேனா எம்.பி.க்கள், மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்து,  தங்களை தனி அணியாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சிவசேனா கட் சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியது. பதில் நடவடிக்கையாக, தாங்கள்தான் உண்மையான சிவசேனா; ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவ சேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியும், தலைமைத் தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் எழுதியது. இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே அணி யையே உண்மையான சிவசேனாவாக, மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாய கரும், மக்களவை சபாநாயகரும் அங்கீக ரித்தனர். தேர்தல் ஆணையமும் இத னையே பின்பற்றும் என்று செய்திகள் வெளி யாகின. இதையடுத்து, உண்மையான சிவ சேனா எது என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி  உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தலைவரும், 

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்துள் ளார். “அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்  கம் செய்யும் விவகாரத்தில் இதுவரை  முடிவு எடுக்காததால் யார் உண்மையான  சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. அதிருப்தி எம்எல்ஏக் களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அம்மனு மீது முடிவு செய்யப்படும் வரை  தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கை யும் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு  அனுமதித்தால் அது நீதிமன்ற நடவடிக்கை யில் தலையிடுவதாக அமைந்து விடுவ தோடு, நீதிமன்ற அவமதிப்பாகவும் மாறி விடும்” என்று உத்தவ் தாக்கரே தனது மனு வில் கூறியுள்ளார். தாக்கரேவின் இந்த மனு மீதான வழக்கு  விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்  கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.