states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘வைக்கம் விழாவை சிறப்பாக நடத்திய தமிழக - கேரள அரசுகளுக்கு நன்றி’

சென்னை,டிச.15- தந்தை பெரியார் தலைமையேற்று வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்றதன்  நூற்றாண்டு விழாவையும் வைக்கம் நினைவிடத்தை புதுப்பித்த தமிழக அரசுக்கும் அதற்கு பக்கபலமாக இருந்த  கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றி தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ளள அறிக்கை யில், வையகம் காணாத ஒரு மனித உரிமை மீட்புக்கான மகத்தான போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.    அந்த வெற்றியின் நூற்றாண்டு விழாவினை ‘திராவிட மாடல்’ அரசும், ‘மார்க்சிஸ்ட் மாடல்’ அரசும்  இணைந்து மூன்று நிகழ்வுகளாகக் கொண்டாடி பெருமை சேர்த்தன.  இரண்டு அரசுகளுக்கும், உலகெங்கும் உள்ள பெரியார் தொண்டர்கள் என்றென்றும் நன்றி மறவாது பாராட்டக் கடமைப்பட்ட வர்கள். மாநில சுயாட்சிப்பற்றி கேரள முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள ஒரு நிலையினை தமிழக முத லமைச்சர்  உள்ளபடியே வழிமொழிந்தது காலத்தின் தேவையாகும்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ரூ.6000 கோடி மோசடி செய்தவரை பாதுகாக்கும் குஜராத் பாஜக அரசு

நாட்டில் நிகழும் மோசடி, கடத்  தல், மத மற்றும் சாதி ரீதி யிலான வன்முறை சம்ப வங்கள்,பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்தும் பிரதமர் மோடியின் சொந்த  மாநிலமான பாஜக ஆளும் குஜராத் மாநி லத்திலேயே அதிகம் நடக்கிறது.  சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் சபர்  கந்தா மாவட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் கூடுதல் பணம் தருவ தாக (போன்சி திட்டம்) கூறி ரூ.6,000 கோடிக்கு மேல் மோசடி செய்து பாஜக  பிரமுகர் பூபேந்திர சிங் தலைமைறை வானார். பூபேந்திர சிங் மீது 49 பேர்  மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து  புகார் அளித்துள்ளனர். இந்த விவகா ரத்தை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  ஆனால் தலைமைறைவாகி 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், குஜ ராத் மாநிலத்திலேயே அவர் சுற்றி திரி வதாக செய்திகள் வெளியாகி வரு கின்றன. பாஜகவைச் சேர்ந்தவர் என்ப தால் பூபேந்திர சிங்கை குஜராத் அரசு  பாதுக்காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்  சாட்டி வருகின்றன.

இராமேஸ்வரம் மீனவர்களை  விரட்டியடித்த இலங்கை கடற்படை 

இராமேஸ்வரம், டிச.15- நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. பாக்ஜலசந்தியில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதில், படகுகள் ஒன்றோடு ஒன்றாக மோதி சேதமடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை துரத்தியதால், 20 க்கும் மேற்பட்ட வலைகளை வெட்டிவிட்டு தப்பியதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை, டிச.15- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் 2 நாட்கள் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியவர் கைது 

திருச்சி.டிச.15- முதல்வர், துணை முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய ரங்கராஜன் நரசிம்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும், தமிழக இந்து சமய அறநிலையத் துறையையும், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும் அவதூறாக பேசி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டார் என ரங்கராஜன் நரசிம்மன் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனது இல்லத்தில் இருந்த ரங்கராஜன் நரசிம்மனை சென்னை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு  பள்ளி மாணவி பலி

விழுப்புரம்,டிச.15- விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பள்ளி மாணவிகளில் ஒரு மாணவி பலியானார்.  புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவி நர்மதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவியான அனுஸ்ரீயை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மீறி ஆற்றில் குளித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

செனட் உறுப்பினராக ரூபி மனோகரன் எம்எல்ஏ நியமனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சட்டமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  கைதானவர்கள் புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை,டிச.15- பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல்  மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.  அச்சோத னையில், 20 கிராம் கஞ்சா, 5 மொபைல் போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன. இந்நிலையில், இச்சம்ப வத்தின் எதிரொலியாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கை தாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஷ்வத்தாமன் உட்பட 23 பேர், மற்ற வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் என, மொத்தம் 38 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்பு புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

‘கடற்கரையில் தங்குவதை தவிர்ப்பீர்’

தூத்துக்குடி, டிச.15- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற் கரையில் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு பக்தர்கள் தங்கு வதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (13.12.2024) காலை நில வரப்படி காயல்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் 105 மில்லி மீட்டர் மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விட்டுள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்யும் சூழல் உள்ளது. எனவே  திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர் கள் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறி வுறுத்தப்படுகிறது. மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் ஆழ மான பகுதிக்கு செல்ல வேண் டாம். கடலோர ஓரத்தில்  புனித நீராடும்படி கோவில் நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

சென்னை,டிச.14- குரூப்-2, குரூப்- 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்ப தாவது: தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (தொகுதி 4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும் : பாஜகவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை,டிச.15-  உச்சநீதிமன்றம் உருவாக்கிய சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்து சமய அறநிலையத்துறை செயல்படும் என்றும் பாஜக அண்ணாமலை தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். அங்கு விளக்கங்களை முன்வைப்போம் என்றும் பாஜகவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் புதிய குடியிருப்பு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். சென்னை வால்டாக்ஸ் ரோடு தண்ணீர் தொட்டி தெருவில் அமைக்கப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகள் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை தங்கசாலை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்பு இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,   252 திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் வஞ்சித்தாலும், பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரண நிதியை தடை இல்லாமல் வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோயிலை நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியவில்லை என பேசிய எச்.ராஜாவுக்கு அண்ணாமலை வந்துவிட்டதால் அவருக்கான கதாபாத்திரம் இருக்காது என்றார். நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை சிஏஜி அமைப்புக்கு விவரங்களை கொடுக்காமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வால் உருவாக்கப்பட்ட சட்டம். ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்கிய சட்டம்  போன்று இந்த சட்டம் இல்லை. எனவே இந்த சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்து சமய  அறநிலையத்துறை செயல்படும். அண்ணாமலை தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தகுந்த விளக்கங்கள் சொல்லும் வகையில் எங்கள் வாதங்கள் இருக்கும்.  கலைஞர் கைவினை திட்டம் வேண்டுமா? வேண்டாமா? அந்தத் திட்டத்தால் மக்களுக்கு பயனுள்ளதா? இல்லையா? திட்டம் யார் கொண்டு வந்தார்கள் என்பது முக்கியமில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு உண்டாகும் பயன்களைத்தான் மையப்படுத்த வேண்டுமே தவிர, திட்டத்தை குறை கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த திட்டத்தை குறை கூறுவது அந்த திட்டத்தால் பயன்பெறும் மக்களை குறை கூறுவதற்கு சமமாகும் என்று  தெரிவித்தார்.