states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மீன் விலை அதிகரிப்பு

 ராயபுரம், ஜூலை 3- சென்னை  காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் ஞாயி றன்று கரை திரும்பின. ஞாயிற்றுக்கிழமையன்று மீன் வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் அதிக அளவில் காசிமேட்டில் குவிந்தனர். இதனால் காசிமேடு மீன் விற்பனை கூடம்  அதிகாலை முதல் களை கட்டியது. மீன்பிடி தடை காலத் திற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக மீன்களின் விலை குறைவாக இருந்த நிலை யில் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது. வவ்வால், வஞ்சிரம், உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை கடந்த வாரத்தை விட கிலொவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகமாக விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1100 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,300 வரை விற்கப்பட்டது. இதேபோல் சிறிய வகை சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்களும் ரூ.50 முதல் 100 வரை அதிகமாக காணப்பட்டது

பிட்காயினில் முதலீடு: ஆசைகாட்டி ரூ.80 லட்சம் மோசடி

திருவள்ளூர், ஜூலை 3- பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர்  பிட்காயினில் முதலீடு செய்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என ஆசை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அதிக வட்டியும் தங்க நாண யமும் வந்து சேரும் என்று தெரிவித்ததை நம்பிய கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் சுமார் ரூ.80 லட்சம் ரொக்க பணத்தை ஆனந்த னிடம் கொடுத்தனர். ஆனால் அவர் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வில்லை. மேலும் அசல் பணத்தையும் திருப்பி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தார். இதனால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த அச்சரப்பள்ளம் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் மோசடி செய்து பணத்தைப் பறித்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரி வித்து உள்ளனர்.

ஏரியில் மூழ்கி  சகோதரிகள் பலி

கடலூர், ஜூலை 3- கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ பெருமாள். கூலி தொழிலாளி. அவரது மனைவி கன்னியாகுமரி. இவர்களது மகள்கள் முத்துலட்சுமி ( வயது 17 ). சகோதரி சிவசக்தி (15). இவர்கள் 2 பேரும் திருமலை அகரம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றனர். திரு விழா முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கினர். சனிக்கிழமை மாலை அக்காள் தங்கை 2 பேரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக திரு மலை அகரத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர்.  வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் ஏரிக்கு சென்றுபார்த்தபோது இரு பெண்களின் உடல்கள் ஏரியில் மிதப்பதை அறிந்தனர். ஏரியில் குளிக்கும்போது  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று  கூறப்படுகிறது. இதுகுறித்த காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

பகுதி நேர பி.இ படிப்பு: ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை, ஜூலை 3- தொழில் நுட்பக்கல்வி இயக்க கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறி யியற் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வி யாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ண ப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. கோவை, சேலம், திருநெல்வேலி அரசினர் பொறியியற் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரிகளில் சேரு வதற்கு விண்ணப்பதாரர் விண்ணப் பிப்பதற்கான கடைசி நாளன்று பட்ட யப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டு கள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந் தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.தொடர்பு எண்: 0422-2590080, கைபேசி எண். 9486977757 என மாநில அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.