பிரேசிலியா, ஏப்ரல் 21- பிரேசிலின் அடுத்த ஜனாதிபதியாக இடதுசாரி வேட்பாளரான லூலா டி சில்வா தேர்வு செய்யப்படு வார் என்று அனைத்து ஆய்வுகள் மற்றும் கருத்துக் கணிப்புகளும் உறுதியாகத் தெரிவிக்கின்றன. வரும் அக்டோபரில் பிரேசிலின் புதிய ஜனாதி பதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற வுள்ளது. இதில் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கப் போகிறார்கள். பலர் போட்டியிட்டாலும், மக்களின் ஆதரவு பெற்றிருக்கும் இடதுசாரி வேட்பா ளரான லூலா டி சில்வாவுக்கும், தற்போதைய ஜனாதிபதியும் வலதுசாரி வேட்பாளருமான ஜெய்ர் போல்சனாரோவுக்கும் இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனா ரோவின் மக்கள் விரோதக் கொள்கைகளால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அவருக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள் ளன. கடந்த தேர்தலில் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி லூலாவைப் போட்டியிட விடாமல் செய்து விட்டார்கள்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லையென்று வழக்குகள் தள்ளு படி ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் அக்டோபரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். இந்நிலையில், பல்வேறு கணிப்புகளும், ஆய்வுகளும் வெளியாகியுள்ளன. அனைத்து முடிவு களும் லூலாவுக்கே வெற்றி என்று கூறுகின்றன. குறிப்பாக, யூரேசியா குழுவினர் நடத்திய ஆய்வு மிகவும் பெரியதாகும். 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் அந்த ஆய்வு நடத்தப் பட்டிருக்கிறது. 12 ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. அதன் முடிவின்படி, லூலா வெற்றி பெற 70 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. முதல் சுற்றிலேயே லூலா வெற்றி பெற்று விடவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. அப்படியே ஒருவேளை இரண்டாவது சுற்று நடந்தா லும், லூலாவைத் தோற்கடிக்கும் வகையிலான ஆதரவு யாருக்கும் இல்லை என்கிறார்கள். ஊட கங்களால் மாற்று வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மூன்றாவது வேட்பாளராக யார் இருந்தாலும் அவர்களுக்கு 5 விழுக்காடுதான் வாய்ப்பு இருப்ப தாகக் கூறப்பட்டுள்ளது.