states

‘சாம்சங்’ நிறுவன அடாவடிக்குத் துணைபோகும் தொழிலாளர் துறை!

சென்னை, நவ.16- முத்தரப்புப் பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு முரணாக சாம்சங்  நிறுவனம் நடந்து கொள்ளும் நிலை யில், அதன் மீது நடவடிக்கைகள் எடுக்காதது மட்டுமன்றி, சாம்சங் நிறு வனத்திற்கு சாதகமாக அரசு வழக்க றிஞரும், தொழிலாளர் துறையும் நடந்து கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்,  2024 நவம்பர் 15 அன்று சென்னை யில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடை பெற்றது. அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்  ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநி லக்குழு உறுப்பினர்கள், மாவட்டச்  செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:

தொழிலாளர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர் கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாத காலத்திற்கும் மேல்  ஆகிறது. வேலைநிறுத்தம் முடி வுக்கு வருவதற்கு தமிழக அரசும், தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக மும் பங்கேற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை காரணமாகும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1450 தொழி லாளர்களில் இதுவரை 450 பேர்  மட்டுமே ஆலைக்குள் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இன்னும் 1000 தொழிலாளர்கள் வேலைக்கு அனு மதிக்கப்படவில்லை. ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலா ளர்களையும் பயிற்சி என்ற பெயரில்  மறைமுகமாக நிர்வாகம் அச்சுறுத்து கிறது. பயிற்சி கொடுப்பவர்கள் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கத் திற்கு வெளித்தலைமை, மூன்றாம் நபர் எதற்கு என்று கேட்டு மூளைச் சலவை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரி கிறது. மேலும், நிர்வாகத்திற்கு ஆதர வாக அமைக்கப்பட்டுள்ள தொழி லாளர் குழுவை ஏற்கச் சொல்லி,  கையெழுத்து கேட்டும் கட்டாயப் படுத்துகிறது.

நிராகரிக்கப்பட்ட  முத்தரப்பு அறிவுரைகள்!

இத்தகைய சாம்சங் நிர்வாகத்  தின் மோசமான நடவடிக்கைகள் தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக்  கொள்ளும் அரசியல் சட்ட உரிமை களுக்கும், ஜனநாயக உரிமை களுக்கும் எதிரானதாகும். தொழிலா ளர்கள் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு நிர்வா கம் மறுத்து, பழிவாங்கல் நடவ டிக்கையை மேற்கொண்டதே வேலை நிறுத்தத்திற்கு பிரதான கார ணமாகும். முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அரசு வழங்கிய அறி வுரையை ஏற்று, தற்போது வரை அதனை செயல்படுத்தாமல் நிரா கரிக்கும் வகையிலேயே சாம்சங் நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. தொழிற்சங்க உரிமையையும், முத்தரப்பு பேச்சுவார்த்தை அறி வுரைகளையும் நிராகரிக்கும் சாம்  சங் நிர்வாகத்தின் அடாவடித்தன மான, சட்டவிரோதமான நடவ டிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படை யில் சாம்சங் தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டும். எவ்வித பழிவாங்கும் நடவடிக்கை களையும் மேற்கொள்ளக் கூடாது. சம்பளம் வழங்குகிறோம் என்று கூறி விட்டு, தொழிலாளர்களை தொழிற்  சாலைக்குள் அனுமதிக்காமல் இருப்பது முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு முரணானதாகும். எனவே, அனைத்து தொழிலாளர் களும் ஆலைக்குள் அனுமதிக் கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.

‘சாம்சங்’கிற்கு சாதகமாக அரசு வழக்கறிஞர்!

தமிழ்நாடு அரசின் தொழிலா ளர் துறை, தொழிற்சங்கத் சட்டத் தின்படி பதிவு செய்யப்பட்ட விண்  ணப்பத்தை ஏற்று பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சங்கப் பதிவு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்  போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜ ராகும் வழக்கறிஞரும் நிர்வாகத்திற் குச் சாதகமாக கால அவகாசம்  கேட்டு வழக்கை நீட்டிக்கச் செய்வது  தொழிலாளர்களையும், தொழிற் சங்கத்தையும் வஞ்சிக்கும் செய லாகும். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறையை கட்சியின் மாநி லக்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, தமிழக அரசு சாம்சங் நிர்வாகத்தின் அடாவடித்தனமான தொழிலாளர் விரோத, சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த  வேண்டுமெனவும், முத்தரப்பு முடி வுகளை செயல்படுத்திட சாம்சங்  நிர்வாகத்தை அரசு வற்புறுத்த  வேண்டுமெனவும், தொழிலாளர் துறை தொழிற்சங்க பதிவினை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு  மாநிலக்குழு தமிழக அரசை வலி யுறுத்துகிறது.