சென்னை, டிச.3- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் தோ.வில்சன்,பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதியை முன்னிட்டு தமி ழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு அளி‘த்துள்ள வாழ்த்துச் செய்தியுடன், சம வாய்ப்பு மற்றும் தடையற்ற சூழல் அமைப்போம் என உறுதி அளித்துள்ளது டன், நமது நீண்ட நாள் கோரிக்கையான உத வித் தொகை உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை மூலம் உதவித் தொகை பெரும் 4,39,315 பேருக்கும் மாதந்தோறும் ரூ.500- உயர்த்தி ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.1500 ஆக வழங் குவதாக பலத்த கை தட்டலுக்கு நடுவே தமி ழக முதல்வர் அறிவித்தார்கள்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் -பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மூலம் தொடர்ந்து உதவித் தொகை உயர்த்த வேண்டுமென்ற கோரிக் கையை கடந்த அதிமுக அரசிடம் வற் புறுத்தி போராடியபோதும் அதிமுக ஆட்சி யாளர்கள் கண்டுகொள்ளாமல் மாற்றுத் திறனாளிகளை அலட்சியப்படுத்தினர். அதேசமயம், 2021 இல் திமுக தலைமை யிலான ஆட்சியில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நமது போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்று கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.1500லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு செய்யப்பட்டது. வருவாய்த்துறையின் மூலம் உதவித் தொகையை பெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்வு ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் நமது போராட்டம் மீண்டும் தொடர்ந்தது. இந்நிலையில், சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நமது சங்கத்தின் தலைவர்களுக்கு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விரைவில் உதவித் தொகை உயர்த்தி வழங் கப்படும் என முதல்வரின் சார்பில் வாக்கு றுதி அளிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 19 ஆம் தேதி நமது சங்கத்தின் 4 ஆவது மாநில மாநாடு செங்கல் பட்டில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்ட பொது மாநாட் டில் நமது அழைப்பை ஏற்று நேரில் வந்து தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தது டன், நமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என நம்பிக்கை அளித்து பேசினார். இந்நிலையில், டிசம்பர் 3 சர்வதேச மாற் றுத்திறனாளிகள் தினத்தன்று அரசு மற்றும் மாற்றுத்திறனாளித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழா வில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்துக் களை தெரிவித்ததுடன், நாம் ஆவலுடன் காத்திருந்த உதவித் தொகை உயர்வு குறித்து ரூ.500 உயர்த்தி வழங்கிடும் அறி விப்பை வெளியிட்டார். உதவித் தொகை உயர்வு குறித்து அறிவித்த தமிழக முதல்வ ருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் -பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களை யும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், முன்னோடி மாநிலமாக திக ழும் தமிழகத்தில் தமிழக அரசு மாற்றுத்திற னாளிகளின் இதர பல கோரிக்கைகளை யும், இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும், இதர அருகாமை மாநிலங்களில் வழங்கப்படுவது போல் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை வழங்கவும், 2016 உரிமை கள் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றவும், அடுத்தக்கட்ட நடவடிக் கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.