states

அமைதியே முக்கியம்

பொகோடா, மே 11- ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் கொலம்பியாவில் அமைதியை  ஏற்படுத்துவதே புதிய அரசின் முக்கியமான பணியாக இருக்கும் என்று வேட்பாளர்களில் ஒருவரான குஸ்தவோ பெட்ரோ அறிவித்துள்ளார். மே 22 ஆம் தேதியன்று கொலம்பியா வின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு  செய்வதற்கான தேர்தல் நடைபெறு கிறது. இதில் இடதுசாரி மற்றும் முற்போக்குக் கட்சிகளின் வேட்பாளராக குஸ்தவோ பெட்ரோ போட்டியிடுகிறார். தலைநகர் பொகோடாவின் மேயராகப் பணியாற்றியிருக்கும் இவர் கடந்த ஜனாதிபதித்  தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.  தற்போதைய தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் இவர் முன்னிலையில் உள்ளார். நிலங்களை ஜனநாயகப்படுத்துவதைத் தனது பிரச்சாரத்தின் பிரதான அம்சமாக வைத்திருக்கும் இவர், அமைதிக்குப் பெரும் முக்கியத்துவம் அளிப்போம் என்று உறுதி தந்து வருகிறார்.