states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

SBI தேர்தல் பத்திரங்கள் தரவுகள் தர முதலில் காலக்கெடு கேட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவுடன் ஒரே நாளில் தரவுகளை தந்தது.  ஆணையிட்டால் திறமையும் தானாக செய்வ தென்றால் காலதாமதமா? தேர்தல் நன்கொடை பெற்றுக்கொண்டு  கார்ப்பரேட்டுகளுக்கு கை மாறாக செய்த சலுகைகள் தரவுகளை மறைக்க மோடி அரசின் பகீரத முனைப்பு. வெளிப்படைத்தன்மை பா.ஜ.க. வின் தேர்தல் லாபத்துக்காக காத்திருக்கக் கூடாது. மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை களுக்கு பின்னர் 30 நிறுவனங்கள் பா.ஜ.க. வுக்கு நன்கொடை தந்ததை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியது. இப்பொழுது மேலும் 11 நிறு வனங்கள் அப்படி செய்திருப்பது நியூஸ் லாண்டரி வெளிப்படுத்தியுள்ளது. அதில் 4 போலி நிறுவனங்கள். மோடி அரசு வழக்கறிஞர் தேர்தல் பத்திரங்கள் போலி நிறுவனங்கள் நன்கொடை தருவதை தடுத்துவிட்டது என வாதிட்டார். மோடி அரசின் கூற்று பொய் என்பது மீண்டும் அம்பலம்.