அமராவதி, ஜூலை 30 - மகாத்மா காந்தியின் உண்மையான தந்தை ஒரு முஸ்லீம் நிலச்சுவான் தார் என்று மகாராஷ்டிரா மாநிலம் சங்க்லி பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பேர்வழியான சம்பாஜி பிடே, வாய்க்கொழுப்பாக பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஷிவபிரதிஸ்தான் ஹிந்துஸ்தான் சன்ஸ்தா அமைப்பின் நிறுவனரான சம்பாஜி பிடே, ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில்தான், “மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியையே நாம் மகாத்மா காந்தி என்று அழைத்து வருகின்றோம்; ஆனால் கரம்சந்த் காந்தி, மோகன்தாஸின் தந்தை அல்ல. ஒரு முஸ்லிம் ஜமீன்தார்தான் அவரது உண்மையான தந்தை” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். “இந்தியா ஒரு இந்து நாடு. இந்துக்களின் வீரம் மகத்தானது. ஆனால், இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த மதம், கடமை மற்றும் பொறுப்பு களை மறந்து விடுவதால் அவர்கள் சீரழிந்து விட்டார்கள்” என்றும் போலிக் கண்ணீர் வடித்துள்ளார். பிடேவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்ட னங்கள் எழுந்துள்ளன.
பிடேவுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சங்கம்னேர் தொகுதி எம்எல்ஏ-வுமான பாலாசாகேப் தோராட், “மகாத்மா காந்தி குறித்து பிடே மிகவும் இழிவான கருத்தை தெரிவித்து உள்ளார். இது நாட்டு மக்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பிடே தொடர்ந்து இது போன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிட்டு வரு கிறார். அவருக்கு யார் சரியாக ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். பிடேயின் நோக்கம் என்ன என்று தெரிய வேண்டும். யாருடைய அரசியல் நலனுக்காக அவர் மீண்டும் மீண்டும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்? பிடே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறேன். இந்த விவகாரத்தில், அரசு விரைந்து செயல்பட்டு பிடே மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக இருந்தவரான சாம்பாஜி உளறல்களுக்குப் பெயர் போனவர். தனது தோட்டத்தில் விளை யும் மாம்பழங்களைச் சாப்பிடும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு, சாம்பாஜி கிளப்பிய சர்ச்சை நீதிமன்ற வழக்குவரை சென்றது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று பீமா கோரே கானில் தலித்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறையிலும் சாம்பாஜி பிடே ஒரு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.