states

குற்றால சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கிடுக!

விருதுநகர், மே.19- கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்  யும் காலத்தில் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தல மாக விளங்கும் தென்காசி மாவட்டத்தில் உள்ள  குற்றாலத்தில் குளு குளு சீசன் துவங்கும். மேலும், அங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றலாம்,  ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். எனவே, இந்த குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேர ளாவிலிருந்தும்  சுற்றுலா பயணிகள் வருகை புரி வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக  குற்றால அருவிகளில் குளிக்க தமி ழக அரசு தடை விதித்திருந்தது. இதனால், சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் பாதிப்படைந்தனர். இந்தநிலையில், தற்போது கொரோனா பரவலானது குறைந்துள்ள நிலையில், அருவி களில் குளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட  வட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எளி தில் குற்றலாத்திற்கு வந்து  செல்ல சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் விரைவு ரயில் ஆகி யவை நாள்தோறும் மதுரை, விருதுநகர், இராஜ பாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்  சிலம்பு விரைவு ரயிலானது திருச்சி, காரைக்குடி,  மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.  மேலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலானது நாள்தோறும் 3 முறை இயக்கப்பட்டு வந்தது. தற்போது இருமுறை மட்டுமே அந்த  ரயில்  இயக்கப்படுகிறது. நன்பகல் 11.15 மணிக்கு  மதுரையிலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு  செங்கோட்டைக்கும், அங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கும் சென்றடை யும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இயக்கப்படாத காரணத்தால், ஏராளமான சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அரசு ஊழி யர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்தில்  அதிக கட்டணம் கொடுத்து, நீண்ட நேரம் பயணம்  செய்யும் நிலை உள்ளது. மேலும், கடந்த 2018 ரயில்வே பட்ஜெட்டில் தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயில் அறிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் ஆகியும் இந்த ரயிலானது இயக்கப்படவில்லை. எனவே, குற்றலா சீசன் துவங்குவதையொட்டி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட மதுரை-செங்கோட்டை பகல் நேர பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். நெல்லை -மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என பொது மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.