states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரூ. 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

\சென்னை, அக். 23 - கடந்த வாரம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ. 58 ஆயி ரத்தைக் கடந்து புதிய உச்ச த்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ரூ. 160 உயர்ந்து, ரூ. 58 ஆயிரத்து 400-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம், புதன்கிழமை காலை பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 58 ஆயிரத்து 720 ஆக உயர்ந்தது. கிராம் ரூ. 7 ஆயிரத்து 340-க்கு விற்பனையானது. அதே போல 24 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 7 ஆயி ரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் ஆர்ஜேடிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கிய ஜேஎம்எம்

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜேஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச் சா), காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும், எஞ்சிய 11 தொகுதிகள் கூட்டணியின் பிற கட்சி களுக்கு ஒதுக்கப்படும் என ஜேஎம்எம் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் அண்மையில் அறி வித்தார். இதற்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆர்ஜேடி கடும் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து கருத்து வேறு பாடுகளை களைவதற்கு ஹேமந்த் சோர னும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியும் 2 முறை சந்தித்துப் பேசினர். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் ஆர்ஜேடிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ஜேஎம்எம் கட்சி அறிவித்துள்ளது. ஜார்க்கண்டில்  அடுத்த மாதம் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

பெங்களூரு கட்டட விபத்து தமிழர்கள் உட்பட 8 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வடகிழக்கு பருவமழை வெளு த்து வாங்கி வருகிறது. இந்நிலை யில், பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப் பட்டு வந்த 6 மாடி கட்டடம் கனமழை காரணமாக செவ்வாயன்று இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். செவ்வாயன்று நள்ளிரவு வரை  5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்க ளில் பலர் பலத்த காயங்களோடு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து புதனன்று நடைபெற்ற மீட்புப் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணி கண்டன், சத்தியராஜ் உட்பட முன்று உடல் கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட் டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

பாஜக மாணவர் அமைப்பின் நிர்வாகியை  பல்கலை.சிண்டிகேட் உறுப்பினராக நியமிப்பதா?  ஆளுநருக்கு மாணவர் சங்கம் கடும் கண்டனம்

சென்னை,அக்.23- பாஜக மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க பரிந்துரை செய்துள்ள தமிழக ஆளுநருக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் 3 நபர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள  வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பரிந்துரை வழங்கியிருக்கிறார். அதில் சவிதா  என்பவர் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ஆவார். ஆளுநர் தனது அதிகாரத்தின் மூலம் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்த நபர்களை மாநில பல்கலைக்கழகங்களில் நியமித்திருப்பது என்பது கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை அரசியலமைப்பு வழங்கியிருக்க கூடிய பொறுப்பில் இருக்கும் நபர் செய்திருப்பது சட்டத்துக்கு புறம்பானது.  ஆளுநரின் இந்த நியமனத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, அதனை திரும்பப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.  இதில் மாநில அரசாங்கம் உரிய தலை யீடு செய்ய வேண்டும். ஜனநாயக அமைப்புகள் இதனை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெயின்போ மருத்துவமனை  10 நாள் சிகிச்சை அளிக்கத் தடை

சென்னை,அக்.23-  ரெயின்போ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தபோது குழந்தையின் தொப்புள் கொடியை யூ டியூபர் இர்பான் வெட்டுவது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார். மருத்துவ விதிகளை மீறி யூடியூபில் இர்பான் வீடியோ  வெளியிட்டது சர்ச்சையானது. இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் ரெயின்போ மருத்துவமனை 10 நாள்  மருத்துவம் செய்ய தடை விதித்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.  மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் தவிர, மற்ற சிகிச்சைகள் வழங்கக் கூடாது. மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மேலாளர் கைது

கடலூர்,அக்.23- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வராமல் இருக்க ரூ.25 ஆயி ரம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  செந்தில் குமார் மற்றும் உத வியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீபாவளி நேரத்தில் சோதனை செய்யாமல் இருப்பதற்காக உதவியாளர் ராதாகிருஷ் ணன் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சியில் ஈடுபட்டார்.

9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு!

சென்னை, அக். 23 - வங்கக் கடலில் உரு வாகியிருக்கும் ‘டாணா’ புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் செவ்வாயன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலை யில், டாணா புயல் வியாழக் கிழமை (அக்.24) தீவிர புய லாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட 9 துறைமுகங்களி லும் புதனன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தீபாவளிக்கு  சிறப்பு ரயில்

சென்னை, அக்.23- தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், சென்னை சென்ட்ர லில் இருந்து வரும் 29 மற் றும் நவம்பர் 5 ஆகிய தேதி களில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06001), மறு நாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடை யும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும்  அதிவிரைவு சிறப்பு ரயில்  (06002), மறுநாள் காலை  3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாகிறது டிவிஎஸ் மோட்டார்

கிருஷ்ணகிரி, அக்.23- ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீன மயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3  சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. 3.28  லட்சம் சதுர அடி பரப்பள வில் உள்ள கட்டுமான பகு தியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.