குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தில்லி யில் ஞாயிறன்று தொடங் கியது. படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் குடி யரசுத் தலைவர் திரவு பதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கொட்டும் மழையை யும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள், படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்தனர். திரும்புதல் நிகழ்ச்சியில் 29 வகை யான இசை வாத்தியங் கள் இசைக்கப்பட்டன.
ஒன்றிய பட்ஜெட் தயா ரிப்புக்காக முக்கிய ஆலோ சனைகள் நடந்து வரு கின்றன. பிரதமர் தலை மையில் அமைச்சரவை கூட்டம் ஞாயிறன்று நடந்தது. பட்ஜெட் அறி விப்புகள் குறித்து விவா தம் நடைபெற்றது.
அரியானா மாநிலம் சோனிபட்டில் ஞாயி றன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மோச மான வானிலை காரண மாக ஹெலிகாப்டர் இயக்கத்துக்கு அனுமதி கிடைக்காததால் பொதுக் கூட்டம் ரத்தானது என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் 53 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலர் -எஸ்.டி.பிரபாகரன் பணிக்குழு பொறுப்பாளராக நிய மிக்கப்பட்டுள்ளார்.