states

ஆளுநரை வெளியேற்ற பேரவையில் தீர்மானம்

சென்னை, ஏப்.8- ஆளுநரை வெளியேற்ற சட்டப்பேரவையில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வலியுறுத் தியுள்ளனர். சென்னையில் குடிமைப்  பணிதேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரை யாடியபோது ஆளுநர் ரவி தெரிவித்த கருத்து களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வருமாறு கி.வீரமணி: ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள் ஆணவத்தின் உச்சமாகும். மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அவற்றை நிரா கரித்தது என்றே பொருள் என்று அவர் கூறியிருப்பது, அவரது முரண்பட்ட நடத்தைக்கு உதாரணமாகும். அதேபோல, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போரா டியவர்களையும் கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார். இவற்றை வன்மையாக கண்டிக்கிறோம். 

திருமாவளவன்: மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை ஆளு நர் ஆர்.என்.ரவி ஒரு  பொருட்டாகவே மதிக்க வில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மதிக்கத் தயாராக இல்லை. இது  மக்களுக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரானப் போக்காகும். அதிகார மமதை அவரது பேச்சில் வெளிப்படுகிறது. இவர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்எஸ்எஸ் ரவி என்பதை மறுபடியும் உறுதிபடுத்தியிருக்கிறார். எனவே, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்த வேண்டும். சட்டப்பேரவை காங்கிரஸ்  கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை: ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள், அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழக மக்களுக்கும் அவர் செய்யும் துரோகமாகும். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பேசியது, அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தைச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.  மக்கள் நீதி மய்யம்: அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமை யாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், “ரவி பவன்”அல்ல என்பதை  நினைவில்கொள்ள வேண் டும். தி.வேல்முருகன்: வெளி நாட்டு நிதியில் பணம் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு, அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்று மக்களின் உணர்வுகளால் முன்னெடுக் கப்பட்ட போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார். எனவே, ஆளுநராக நீடிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர். அவரை வெளியேற்ற நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.