இராமேஸ்வரம், ஜூலை 21- இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 3,000 மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். புதன்கிழமை இரவு 9.30 மணியள வில் ரோந்து வந்த இலங்கைக் கடற் படையினர் எல்ல தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி ஆறு மீனவர் களைக் கைது செய்து இலங்கையி லுள்ள தலைமன்னாருக்கு அழைத் துச் சென்றுள்ளனர். கைது செய்யப் பட்டவர்கள் காரையூர் பால முருகன் (45), கே.அர்ஜூனன் (23), தங்கச்சிமடம் ஆண்டனி (38), ஜி. மதுகுபிச்சை (45), இராமேஸ்வரம் கே.தங்கபாண்டி (55), இராமேஸ் வரம் சிவகாமி நகர் ராஜா (21) என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்துப்பேசிய மீனவர் சங்கத் தலைவர் ஜேசு ராஜா, இலங்கை பெரும் பொருளா தார நெருக்கடியில் இருந்த நேரத் தில், அத்தியாவசிய பொருட்களை அனுப்பி நாட்டிற்கு இந்தியா உதவி யது. இலங்கையில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்தனர்,
அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத் துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீன வர்கள் தாமாக முன்வந்து அத்தியா வசியப் பொருட்களைக் கொண்டு செல்ல முன்வந்தனர். இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் ஆறு மீனவர்க ளைக் கைது செய்திருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இது போன்ற தொடர் நிகழ்வுகளால் மீனவர்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாக மாறியுள்ளது. எங்களின் கோரிக்கை இது வரை தீர்க்கப்பட வில்லை. ஒன்றிய - மாநில அரசுகள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். ஏற்கனவே, இலங்கைக் கடற்படையினர் 2018ஆம் ஆண்டு முதல் நூற்றுக் கணக்கான படகுகளை சிறை பிடித் துள்ளனர். பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் விடுவிக்க வில்லை. ஒரு இயந்திரப் படகின் விலை சுமார் ரூ. 50 முதல் 70 லட்சம் ரூபாய். கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு பல மீனவர்களின் வாழ்வாதாரம் பரிதாபமாக உள்ளது என்றார்.