சென்னை,ஏப்.23- இலங்கை மற்றும் அதன் ஒட்டிய பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரண மாக தமிழகத்தில் சில மாவட்டங்க ளில் வரும் 27ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று , சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) தென் தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென் னையில் அடுத்த 48 மணிநேரத் திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்பகுதியில் ஒட்டி யிருக்கக்கூடிய தென் தமிழகத் தில் கன்னியாகுமரி கடற் பகுதியில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.