states

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, செப்.11- மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாங்கமுடியாத மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 விழுக்காடு முதல் 53  விழுக்காடு வரை கடுமையாக உயர்த்தி யுள்ளது. இதன் மூலம் மின் வாரியத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் தலையில் கடுமையான சுமை  ஏற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவு  என்பதால், ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது என்றும், கடந்த 8  ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை என்பதையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற் சிப்பது சரியல்ல. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்க ளுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெருநஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்கதக்க விளக்கமில்லை.

தற்போது, நடைமுறையில் உள்ள 100 யுனிட் இலவச மின்சாரமும், மானிய சலுகை கட்டண முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும், இந்தக் கட்டணச் சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறி யிருப்பது மறைமுக நிர்பந்தம் மூலம் மானி யங்களை பறிக்கும் செயலாகவே அமை யும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மின்கட்டண உயர்வு தவிர நிலைக் கட்ட ணம் வசூலிக்கப்படும் என்பதும், ஆண்டுக்கு  6 விழுக்காடு மின்கட்டண உயர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்திருப் பதை ஏற்க முடியாது. பாஜக ஒன்றிய அரசின்  நவ தாராளமயக் கொள்கைகள்,  மக்கள் வாழ்க்கை தரத்தில் கடுமையான தாக்கு தலை நடத்தி, சரித்து வீழ்த்தி வரும்  சூழலில், தமிழ்நாடு அரசு மின்கட்ட ணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த் தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பான கருத் துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர் வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப் பளித்து, மின்கட்டண உயர்வையும், நிலைக்  கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 விழுக்காடு மின் கட்டண உயர்வு செய்யும்  திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;