states

புதுவை பல்கலை. துணைவேந்தருக்கு கூடுதல் பொறுப்பு

திண்டுக்கல், ஜூலை 9- புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங்குக்கு, காந்தி கிராம பல்கலை துணை  வேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக் துணை வேந்த ராக பணியிலிருந்த மாதேஸ்வரன் பணி விலக்கியதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக ரெங்கநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக இவர் பொறுப்பு துணைவேந்தராக பணி புரிந்து வந்த நிலையில், திடீரென  ரெங்கநாதனை பணி விலகச் செய்துவிட்டு, புதுச்சேரி பல்கலை  துணைவேந்தராக உள்ள குர்மித்சிங் கிற்கு கூடுதல் பொறுப்பாக  காந்திகிராம பல்கலை துணை வேந்தர் பதவியை வழங்கி ஒன்றிய  அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொறுப்பு துணை வேந்தராக இருந்த ரெங்கநாதன் உடனடியாக பொறுப்பு துணை வேந்தர் பதவியில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளார். எதிர்ப்பு காந்திகிராம பல்கலைக் கழக  துணைவேந்தரை நியமிக்க ஒன்றிய  அரசு குழு அமைத்து சில தினங்களே ஆனநிலையில் அதற்குள் கூடுதல் பொறுப்பிற்கு பல்கலை அல்லாத வெளிநபரை நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வழக்கமாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் உள்ள மூத்த பேராசிரி யரை பொறுப்பு துணை வேந்தராக நியமிப்பது வழக்கம். தற்போது விதியை மீறி நியமித்துள்ளதாக கூறி பல்கலை ஆட்சிமன்ற குழு  உறுப்பினர்களாக உள்ள பேரா சிரியர்கள் ஆனந்தகுமார், வில்லி யம் பாஸ்கரன், பாலசுந்தரி ஆகிய மூன்று பேர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.