வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி சென்னை, ஜூலை 14- அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசியிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் கை கூப்பி நின்றிருக்கும் புகைப்படமும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஸ்டாலின் நின்றிருக்கும் புகைப்பட மும் தான் இவை.நாஞ்சில் கோலப் பனுடன் பேசிய பொன்னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசி யிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். கோகுல இந்திரா ஓ.பன்னீர் செல்வத்தைப் பற்றி தவறான வார்த்தை களால் பேசுகிறார்.
கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பி னர் பதவிக்காக எப்படி ஓ.பன்னீர் செல்வத்தை அவர் அணுகினார் என்பது எனக்குத் தெரியும். கே.பி.முனுசாமி நக்ஸலைட் ஆக இருந்ததால் ஜெயல லிதா அவரை ஒதுக்கி வைத்ததாக பொன்னையன் கூறியிருக்கிறார். அதிமுக பொதுக்குழுவில் சாதி வெறி அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிந்தது. அதிமுக தலைமை அலுவ லகத்திற்கு நாங்கள் சென்றபோது எடப்பாடி பழனிசாமி சார்ந்த ஏழு மாவட்டச் செயலாளர்களின் அடி யாட்கள் எங்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந் தால் பல கொலைகள் நிகழ்ந்திருக் கும். நாடாளுமன்றத்தில் ஒரே அதிமுக உறுப்பினராக ரவீந்திரநாத் உள்ளார். ரவீந்திரநாத் முதலமைச்சரை பார்த்தது தவறு என்றால் நீங்களும் தான் முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர் ்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்பொழுது ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு லட்சம் பேரும் ஓ.பன்னீர் செல்வத்தை நோக்கி வர வேண்டும். அதிமுக சாதிப்பாதையில் போவதை விரும்பாமல் பொன்னையன் உண்மையைப் பேசியுள்ளார். திமுக நினைத்திருந்தால் இந்த பொதுக்குழு நடந்திருக்காது. ஏனென்றால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று காரணமாக 50 பேருக்கு மேல் கூட்டம் கூட அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தால் பொதுக்குழு நடந்திருக்காது என்றார் புகழேந்தி.